திமுக போன்ற கட்சிகள் அதிக பணம் பட்டுவாடா கோவை தெற்கு தொகுதியில் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் வேலுமுருகன் என்பவர் கோவை ஆட்சியரிடம் அளித்தார்.
கோவை தெற்கு தொகுதிக்குட்பட்ட பகுதியில் திமுக சார்பில் செந்தில்பாலாஜி போட்டியிடுகிறார். இந்நிலையில், அவரது ஆதரவாளர்கள் திமுக பணம் பட்டுவாடா செய்கிறது. அதே போல பெரிய கட்சிகள் மாறி மாறி பணம், தங்கம் என பட்டுவாடா செய்வதால், இந்த தெற்கு தொகுதி தேர்தலை ரத்து செய்ய வேண்டும்.
முகத்திரை கிழியும்.. அண்ணாமலை – வானதி சீனிவாசன் நடத்திய ரோடு ஷோ..!
எங்களைப் போன்ற சுயேச்சைகள் செலவு செய்து தேர்தலை சந்திக்க முடியாத சூழலில், இது போல் பணம் பட்டுவடா நட்வடிக்கைகள் ஜனநாயகத்தை கேள்வி குறி ஆக்குவதால் இந்த தேர்தலை ரத்துச் செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பவன்குமாரை சந்தித்து மனு அளித்தார்.
இந்நிலையில், அவர் உரிய முறையில் நடவடிக்கை எடுப்பாரா என்ற சந்தேகம் இருப்பதால் அவரையும் மாற்ற வேண்டும் என கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளர்.

