சென்னை பேஷன் பிரிட்ஜ் சாலையில் ரேஷன் அரிசி மூட்டைகளை ஏற்றி வந்த லாரி, பிரேக் பழுதானதால் கட்டுப்பாட்டை இழந்து சிக்னலில் நின்றிருந்த வாகனங்கள் மீது மோதியது.இந்த கோர விபத்தில், உயர்நீதிமன்ற பதிவாளர் உட்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் சிலர் காயமடைந்து ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.விபத்து குறித்து தகவல் அறிந்த போக்குவரத்து புலனாய்வு போலீசார் மற்றும் மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
உண்டியல் வசூல், தங்கம் உருக்கியதில் முறைகேடா?.. அமைச்சர் ரமேஷ் அதிரடி எச்சரிக்கை..!
லாரியின் பிரேக் செயலிழந்ததே விபத்திற்கான காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ள நிலையில்,இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.ஒரு கண நேரத்தில் இரண்டு உயிர்களை காவு வாங்கிய இந்த விபத்து சென்னையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

