நயினார் நாகேந்திரன் அறிக்கை பாஜ, கீர்த்தி சக்ரா விருது மீனாட்சி சுந்தரம், தமிழக ராணுவ வீரர் லான்ஸ் நாயக், ஜம்மு காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல், இந்திய ராணுவ வீரர்களுக்கு விருது 2026, நயினார் நாகேந்திரன் டிவிட்டர் பதிவு, தமிழகத்தின் பெருமை ராணுவ வீரர் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதலில் முகத்திலும் தோள்பட்டையிலும் குண்டுகள் பாய்ந்த போதிலும், நெஞ்சுரத்துடன் போராடி நமது பாரதத்தின் வெற்றியை உறுதி செய்த தமிழகத்தைச் சேர்ந்த இந்திய இராணுவ வீரர் லான்ஸ் நாயக் மீனாட்சி சுந்தரம் அவர்களுக்கு, கீர்த்தி சக்ரா விருது வழங்கி கௌரவித்த நமது மத்திய அரசுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தேசப்பற்று, தியாகம் மற்றும் துணிச்சல் ஆகியவற்றிற்கு இலக்கணமாகவும், இன்றைய இளைஞர்களுக்கு ஆகச்சிறந்த முன்னுதாரணமாகவும் விளங்குவதோடு, நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான கீர்த்தி சக்ரா விருது பெற்று தமிழகத்தின் பெருமைமிகு அடையாளமாகத் திகழும் லான்ஸ் நாயக் மீனாட்சி சுந்தரம் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதலில் முகத்திலும் தோள்பட்டையிலும் குண்டுகள் பாய்ந்த போதிலும், நெஞ்சுரத்துடன் போராடி நமது பாரதத்தின் வெற்றியை உறுதி செய்த தமிழகத்தைச் சேர்ந்த இந்திய இராணுவ வீரர் லான்ஸ் நாயக் மீனாட்சி சுந்தரம் அவர்களுக்கு, கீர்த்தி சக்ரா விருது… pic.twitter.com/F9nFMiRpJ9
— Nainar Nagenthran (@NainarBJP) June 9, 2026

