தினமும் சமையல் செய்து அலுத்துப் போய் இருக்கும் பலருக்கு சில நேரங்களில் சமையலை சலிப்பு தட்டி விடும். அப்படிப்பட்ட சமயங்களில், அதிக நேரம் செலவிடாமல் மதிய உணவுக்கு அசத்தல் சுவைகள் உருளைக்கிழங்கு தயிர் குழம்பு எவ்வாறு செய்யலாம் என்பது குறித்து இந்த பதிவில் காண்போம்.
தேவையான பொருட்கள்
- இரண்டு தேக்கரண்டி எண்ணெய்
- ஒரு வேக வைத்து நறுக்கிய பெரிய உருளைக்கிழங்கு
- சிறிது உப்பு
- அரை தேக்கரண்டி கடுகு
- அரை தேக்கரண்டி சீரகம்
- கால் தேக்கரண்டி பெருங்காயத்தூள்
- ஆறு பல் பூண்டு பொடியாக நறுக்கியது
- ஒரு பொடியாக நறுக்கிய வெங்காயம்
- ஒரு கொத்து கருவேப்பிலை
- ஒரு நறுக்கிய பச்சை மிளகாய்
- ஒரு நறுக்கிய தக்காளி
- மஞ்சள் தூள் அரை தேக்கரண்டி
- மிளகாய் தூள் சுவைக்கேற்ப
- உப்பு சிறிதளவு
- கொத்துமல்லி 400 மில்லி
- புளிப்பில்லாத கெட்டி தயிர்
செய்முறை
திடீர் விருந்தினர்களா?.. 15 நிமிடத்தில் அசத்தலான மலாய் பர்பி டிப்ஸ்..!
Step 1: முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் இரண்டு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் வேகவைத்து துண்டுகள் ஆக்கப்பட்ட உருளைக்கிழங்கை சேர்த்து சிறிது உப்பு தூவி நன்றாக ஒரு தட்டிற்கு மாற்றிக்கொள்ள வேண்டும். இதனை தொடர்ந்து அதே பாத்திரத்தில் மீதமுள்ள எண்ணெய், கடுகு, சீரகம், பெருங்காயத்தூள் மற்றும் பொடியாக நறுக்கிய பூண்டு பற்களை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
Step 2: பின்பு அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் கருவேப்பிலை பச்சை மிளகாய் சேர்த்து நன்கு ஒரு நிமிடம் வரை வதக்கி கொள்ள வேண்டும். இதை அடுத்து நறுக்கிய தக்காளியை சேர்த்து ஒரு நிமிடம் வதைக்க வேண்டும்.
Step3: பின்னர் அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள் சுவைக்கு ஏற்ப உப்பு தடவி நன்றாக கிளற வேண்டும். அதன் பின்னர், நன்றாக வறுத்து வைத்துள்ள உருளைக்கிழங்கை சேர்த்து ஒரு நிமிடம் வதக்க வேண்டும். இறுதியாக கொத்துமல்லி தூவி கிளறி புளிப்பில்லாத கெட்டி தயிரை சேர்த்து கலந்து விட்டு லேசாக சூடானதும் இறக்கினால் சுவையான உருளைக்கிழங்கு தயிர் குழம்பு தயார்.

