பொதுவாக, தாமரை விதை மாலை இருக்கும் இடத்தில் அனைத்து செல்வங்களும் பெருகும் என்பது அனுபவபூர்வமாக அறியப்படுகிறது. இந்த மாலையை பல சன்னியாசிகள் அணிந்திருப்பதைப் நம்மில் சில பேர் பார்த்திருப்போம். இதற்குக் காரணம், இந்த மாலையை அணிந்தால், மனம் அலைபாயாமல் ஒரு நிலையாக இருக்கும் என்பது தான்.
தாமரை விதை மாலை எனப்படுவது, லட்சுமி தேவியின் அருளைப் பெற்று, செல்வச் செழிப்பையும், நேர்மறை ஆற்றலையும் அதிகரிக்கும் ஒரு புனிதமான மாலையாகும். இது 108 தாமரை விதைகளைக் கொண்டு செய்யப்படுகிறது, இதை லட்சுமி மந்திரங்களை ஜபிக்கவும், கழுத்தில் அணியவும் பயன்படுத்தலாம்.
தாமரை விதை மாலையின் சிறப்புகள்
- வீட்டில் தாமரை மணி மாலை வைத்திருப்பது லட்சுமி தேவியை ஈர்த்து, பொருளாதார தடைகளை நீக்கி, பணம் சேர வழிவகுக்கும்.
- இந்த மாலையை அணிவது மனதில் ஏற்படும் அலைபாயும் தன்மையைக் குறைத்து, மன அமைதியையும், நேர்மறை எண்ணங்களையும் தரும்.
- இந்த மாலையை வைத்து லட்சுமி தேவியின் மந்திரங்களை (ஓம் லட்சுமி நமஹ) உச்சரிப்பது மிகவும் விசேஷமானது.
- இது ஒரு இயற்கை பொருள் என்பதால், பூச்சிகள் வராமல் தடுக்க வாரத்திற்கு ஒருமுறை வேப்ப எண்ணெய் தோய்த்த துணியால் துடைத்து, வெயிலில் காய வைக்கலாம்.
- வியாழக்கிழமை மற்றும் தீபாவளி போன்ற நாட்களில் இந்த மாலையை அணிவது மிகவும் சிறப்பானதாக கருதப்படுகிறது.

