சூரிய பகவானின் பிறந்த நாளாகக் கொண்டாடப்படும் ரத சப்தமி அன்னைக்கு, என்ன செஞ்சா அபூர்வ பலன்கள் கிடைக்கும்னு உங்களுக்குத் தெரியுமா? தை மாத அமாவாசைக்கு அடுத்து வரும் சுக்ல பட்சத்து ஏழாவது நாள் (சப்தமி திதி) ரத சப்தமியாகக் கொண்டாடப்படுகிறது. இது சூரிய ஜெயந்தி அல்லது ஆரோக்கிய சப்தமி என்றும் அழைக்கப்படுகிறது.
கடன் தொல்லையா?.. ஓட ஓட விரட்டும் ‘மேஜிக்’ பவளம்..!
ரத சப்தமி நாள் காலையில குளிக்கும்போது, 7 எருக்கிலைகளை எடுத்து தலை, தோள்பட்டை, மற்றும் கால்களில் வைத்து குளிப்பது ரொம்பவே விசேஷம். அந்த எருக்கிலை மேல கொஞ்சம் மஞ்சள், அட்சதை (பச்சரிசி) வச்சு குளிச்சா, செஞ்ச பாவங்கள் எல்லாம் நீங்கி, மனசு தூய்மையாகும்னு சாஸ்திரங்கள் சொல்லுது.
குளிச்சு முடிச்சதும், சூரிய பகவானுக்கு வீட்டு வாசல்லயோ அல்லது மொட்டை மாடியிலயோ சர்க்கரைப் பொங்கல் வச்சு, தீபாராதனை காட்டி வழிபடணும். இப்படி செஞ்சா சூரிய தோஷங்கள் விலகி, நோய்கள் நீங்கி, ஆரோக்கியமும் செல்வ வளமும் பெருகும்.

