தமிழகத்தில் தகவல் ஆணையர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெற்ற தேர்வுக்குழு கூட்டத்தில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொள்ளவில்லை. புதிய மாநிலத் தகவல் ஆணையர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்வுக்குழு கூட்டம் முதலமைச்சர் விஜய் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சபாநாயகர் ஜெ.சி.டி. பிரபாகர் பங்கேற்றார்.
மக்களின் நலனே அரசின் முதன்மை இலக்கு.. செங்கோட்டையில் பிரதமர் மோடி அதிரடி..!
தேர்வுக்குழுவின் உறுப்பினரான எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இக்கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. அவர் இந்தக் கூட்டத்தைப் புறக்கணித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எதிர்க்கட்சித் தலைவர் பங்கேற்காத நிலையிலும், தேர்வுக்குழு தனது பணிகளை மேற்கொண்டு ஒரு மாநிலத் தலைமைத் தகவல் ஆணையர் மற்றும் நான்கு மாநிலத் தகவல் ஆணையர்களைத் தேர்ந்தெடுத்துள்ளது. இவர்களது பெயர்கள் ஒப்புதலுக்காக ஆளுநர் ஆர்.வி. ஆலேகருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

