குழந்தைகளுக்கு ஆரோக்கியமான புத்துணர்ச்சியூட்டும் நாவில் கரையும் மலாய் பர்பி சாப்பிட கொடுக்கலாம். அதிக சத்துக்களை உடலில் உண்டாகும். இந்த மலாய் பர்பி உடலுக்கு மிகவும் நன்மை தரும். இதனை எப்படி செய்வது என்பது பற்றி இந்த பதிவில் காண்போம்.
தேவையான பொருட்கள்
- ஒன்றரை கால் லிட்டர் பால்
- ஒரு பெரிய எலுமிச்சம்பழம் சாறு
- 200 கிராம் சர்க்கரை
- ஒரு சிட்டிகை ஏலக்காய் தூள்
- 50 மில்லி பாதாம் பிஸ்தா
வீடே மணக்கும் சாக்லேட் ஸ்வீட்.. இந்த சிம்பிள் டிப்ஸ் தெரிஞ்சா நீங்கதான் ஸ்வீட் மாஸ்டர்..!
செய்முறை
Step 1: கால் லிட்டர் பாலை தனியே எடுத்து வைக்கவும். மீதமுள்ள ஒரு லிட்டர் பாலை நன்கு கொதிக்க வைக்கவும். இதிலிருந்து ஒரு கரண்டி பால் எடுத்து எலுமிச்சைச்சாறு ஊற்றினால், பால் திரிந்துவிடும். இதை கொதிக்க வைத்த பாலில் ஊற்றவும். பால் திரிந்து மிதக்க ஆரம்பிக்கும். இதை ஒரு துணியில் நன்றாக வடிகட்டவும். இதுதான் பன்னீர்.

Step 2: தண்ணீரில் சிறிது பன்னீரை நன்கு அலாசவும். எலுமிச்சையின் மனம் நீங்கிவிடும். தனியாக எடுத்து வைத்த கால் லிட்டர் பாலை கொதிக்க வைத்து, அதில் பன்னீரை சேர்த்து கலக்கவும். ஏலக்காய் தூள், நெய் ஊற்றி குறைந்த தீயில் நன்கு கிளறவும்.
Step 3: பின்னர், தட்டில் நெய் தடவிக் கொள்ளவும். கலவையை இறக்குவதற்கு முன் பாதாம், பிஸ்தா லேசாக மேல் பரப்பில் தூவி விட வேண்டும். ஆறிய உடன் கத்தியை கொண்டு பீஸ் போட்டு குழந்தைகளுக்கு கொடுக்கலாம். சுவையான மலாய் பர்பி ரெடி.

