தேவையான பொருட்கள்
- சேமியா – 2 கப்
- வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
- பச்சை மிளகாய் – 2
- இஞ்சி – சிறிய துண்டு (துருவியது)
- கடுகு, உளுந்தம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா 1/2 டீஸ்பூன்
- கறிவேப்பிலை – சிறிதளவு
- மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை
- உப்பு – தேவைக்கேற்ப
- எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
- தண்ணீர் – 3 கப்
செய்முறை
Step 1: ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி, சேமியாவை பொன்னிறமாகும் வரை வறுத்து தனியே எடுத்து வைக்கவும். அதே வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுந்தம்பருப்பு, கடலைப்பருப்பு தாளிக்கவும்.
Step 2: பிறகு நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். 3 கப் தண்ணீர் ஊற்றி, தேவையான உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க விடவும்.
15 நிமிடத்தில் அல்வா செய்ய வேண்டுமா?.. குழந்தைகள் விரும்பி உண்ணும் பனானா பிரட் அல்வா..!
Step 3: தண்ணீர் நன்கு கொதித்ததும், வறுத்து வைத்துள்ள சேமியாவைச் சேர்த்து கிளறவும். மிதமான தீயில் வைத்து, தண்ணீர் வற்றி சேமியா வெந்து வரும் வரை மூடி வைக்கவும். நன்கு கிளறி இறக்கவும்.
தேங்காய் சட்னி
தேவையான பொருட்கள்
- தேங்காய் துருவல் – 1/2 கப்
- பொட்டுக்கடலை – 2 டேபிள் ஸ்பூன்
- பச்சை மிளகாய் – 2
- பூண்டு – 1 பல்
- உப்பு – தேவைக்கேற்ப
- தாளிக்க: கடுகு, உளுந்தம்பருப்பு, கறிவேப்பிலை
செய்முறை
Step 1: மிக்ஸி ஜாரில் தேங்காய் துருவல், பொட்டுக்கடலை, பச்சை மிளகாய், பூண்டு மற்றும் உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி நன்கு அரைக்கவும்.
Step 2: ஒரு சிறிய கடாயில் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுந்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து சட்னியில் கொட்டவும்.

