சூரியனிலிருந்து வெளியாகும் புற ஊதா கதிர்கள் சருமத்தை மிகவும் மோசமாக சேதப்படுத்திவிடும். இதன் விளைவாக சருமத்தின் நிறம் கருமையாக மாறக்கூடும்.
இந்நிலையில், கோடை காலத்தில் உடலையும் சருமத்தையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்காக பல அழகு குறிப்புகள் உள்ளன அதில் முக்கியமானது கேரட். பொலிவிழந்த முகம், கரும்புள்ளிகள், கண் அடியில் இருக்கும் கருவளையம் போன்ற பிரச்சனைகளால் அவதிப்படுபவர்களுக்குக் கேரட் ஒரு மிகச்சிறந்த இயற்கை தீர்வாகும்.

கேரட்டில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி, புதிய செல்கள் உருவாக வழிவகை செய்கின்றன. வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு இது சிறந்த ஈரப்பதத்தை வழங்கி, முகத்தை எப்போதும் மிருதுவாக வைத்திருக்கும்.
ஹீரோயின் போல பளபளப்பான சருமத்திற்கு.. இந்த முலாம்பழம் பேஸ் பேக்களை ட்ரை பண்ணுங்க..!
இன்ஸ்டன்ட் க்ளோ தரும் கேரட்
- வேகவைத்த கேரட் விழுது – 2 ஸ்பூன்
- தேன் – 1 ஸ்பூன்

இந்த மூன்று பொருட்களையும் ஒன்றாகக் கலந்து, பருக்கள் மற்றும் கரும்புள்ளிகள் உள்ள இடங்களில் நன்றாகத் தடவவும். 15 நிமிடங்கள் கழித்து மசாஜ் செய்து முகத்தைக் கழுவ வேண்டும். எலுமிச்சை மற்றும் கேரட்டில் உள்ள வைட்டமின் C, முகத்தில் உள்ள கறைகளை நீக்கி, சருமத்தின் நிறத்தை ஒரே சீராக மாற்றும்.
கரும்புள்ளிகள், பருக்களை நீக்க
- கேரட் சாறு (Juice) – 2 ஸ்பூன்
- எலுமிச்சை சாறு – 1 ஸ்பூன்
- தக்காளி விழுது – 1 ஸ்பூன்

இந்த மூன்று பொருட்களையும் ஒன்றாகக் கலந்து, பருக்கள் மற்றும் கரும்புள்ளிகள் உள்ள இடங்களில் நன்றாகத் தடவவும். 15 நிமிடங்கள் கழித்து மசாஜ் செய்து முகத்தைக் கழுவ வேண்டும். எலுமிச்சை மற்றும் கேரட்டில் உள்ள வைட்டமின் C, முகத்தில் உள்ள கறைகளை நீக்கி, சருமத்தின் நிறத்தை ஒரே சீராக மாற்றும்.
எண்ணெய் பிசுபிசுப்பு
- கேரட் விழுது – 2 ஸ்பூன்
- தயிர் – 1 ஸ்பூன்
- கடலை மாவு – 1 ஸ்பூன்

கேரட் விழுதுடன் தயிர் மற்றும் கடலை மாவு சேர்த்து கெட்டியான பேஸ்ட் போல கலந்து கொள்ளவும். இதனை முகத்தில் பேக் போல போட்டு, 20 நிமிடங்கள் காயவிட்டு, பின் வெதுவெதுப்பான நீரால் கழுவவும். வெயிலினால் ஏற்படும் சன் டான் (Sun Tan) எனப்படும் தோலின் கருமையைக் குணம் ஆக்குவதோடு, முகத்தில் வழியும் அதிகப்படியான எண்ணெயைக் கட்டுப்படுத்தும்.
சுருக்கங்கள் நீங்க
- கேரட் சாறு – 2 ஸ்பூன்
- கற்றாழை ஜெல் – 1 ஸ்பூன்

இரண்டையும் நன்றாகக் கலந்து இரவு தூங்குவதற்கு முன் முகத்தில் மசாஜ் செய்து அப்படியே விட்டுவிடலாம். மறுநாள் காலையில் முகத்தைக் கழுவ வேண்டும். இது சருமத்தில் உள்ள கொலாஜன் (Collagen) உற்பத்தியை அதிகரித்து, முகம் தொய்வடைவதைத் தடுத்து, எப்போதும் இளமையாக வைத்திருக்க உதவும்.
குறிப்பு: இந்த கட்டுரையில் சொல்லப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காகவே. இதன் உண்மைத் தன்மை, துல்லியம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றுக்கு UTN NOW பொறுப்பாகாது.

