கோவை மாநகரில் போதை அரக்கனின் பிடி நாளுக்கு நாள் அதிகரித்து வருவதற்குச் சாட்சியாக, இளைஞர்கள் கூட்டாக அமர்ந்து போதை ஊசி செலுத்திக்கொள்ளும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
“டேய் வலிக்குதுடா… வலிக்குதுடா” என ஒரு இளைஞன் வலியால் சத்தத்துடன் வெளியாகி உள்ள இந்த வீடியோ, கோவையின் அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் அமைந்து உள்ளதோடு பெற்றோர்கள் இடையே பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் நடமாட்டத்தைத் தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்கும் வரும் நிலையில், அவர்கள் பிடிபடாமல் இருப்பதற்காக இளைஞர்கள் தற்போது புதிய மற்றும் விபரீதமான உத்திகளைக் கையில் எடுத்து உள்ளனர்.
டிரைவர் கூப்பிட்டார்.. போதையில் இருந்த பெண்ணை மீட்ட போலீசார்.. அதிர்ச்சி சம்பவம்..! (வீடியோ)
குறிப்பாக, மருந்துக் கடைகளில் கிடைக்கும் வலி நிவாரணி மாத்திரைகளை வாங்கி, அதைத் தண்ணீரில் கரைத்து, ஊசி மூலம் நேரடியாக நரம்புகளில் ஏற்றிக்கொள்ளும் ‘கொடூர’ பழக்கத்திற்குச் சில இளைஞர்கள் அடிமையாகி உள்ளனர்.இத்தகைய போதை ஊசிகள் உடனடியாக மூளையைத் தாக்கி போதையை ஏற்றினாலும், ரத்த நாளங்களைச் சிதைத்து உயிருக்கே எமன் ஆகிவிடும் வைத்துவிடும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
தற்போது வைரலாகி உள்ள வீடியோவில், ஆள் நடமாட்டம் இல்லாத இருட்டுப் பகுதியில் அமர்ந்து உள்ள சில இளைஞர்கள், செல்போன் டார்ச் லைட் வெளிச்சத்தில் ஒருவருக்கொருவர் ஊசி போட்டுக்கொள்ளும் காட்சிகள் வெளியாகி உள்ளது.
கல்லூரி மாணவர்கள் மற்றும் வேலைக்குச் செல்லும் வாலிபர்களைக் குறிவைத்துத் தங்கும் விடுதிகள் மற்றும் தனி அறைகளில் இத்தகைய சட்டவிரோதச் செயல்கள் ரகசியமாக அரங்கேறி வருகின்றன.
போலீசார் கல்லூரி தோறும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தாலும், போதை மருந்து விநியோகிக்கும் நபர்களை தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து உள்ளது. சமூக வலைதளங்களில் பரவி வரும் இந்த வீடியோ ஆதாரத்தை வைத்து, சம்பந்தப்பட்ட இளைஞர்கள் யார் ? அவர்களுக்குப் போதை மருந்துகளை விநியோகிக்கும் ‘கும்பல்’ எது ? என்பது குறித்து கோவை மாநகர போலீசார் அதிரடி விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். இளைய சமுதாயம் இத்தகைய நவீன போதை கலாச்சாரத்தில் இருந்து மீட்கப்படாவிட்டால், வருங்காலம் கேள்விக்குறியாகிவிடும் எனச் சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

