நடிகை மீனா பொதுவாக சினிமா படப்பிடிப்புகள், குடும்ப புகைப்படங்கள் மற்றும் சுவாரஸ்யமான தருணங்களை மட்டுமே சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருபவர். அரிதாகச் சமூக அல்லது பொதுக்கருத்துகளைப் பகிர்வது வழக்கம் இல்லை என்பதால், அவரது இந்த ஆழமான சிந்தனைப் பதிவு ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது.
சாதி, மதம், பாலினம் போன்ற அடையாளங்களைக் கடந்து, மனிதாபிமானமும் நல்ல குணமுமே மனிதனை உயர்த்துகிறது என்பதை மிக எளிய முறையில் அவர் சுட்டிக்காட்டியுள்ளதாகப் பலரும் பாராட்டி வருகின்றனர். இந்த இன்ஸ்டாகிராம் பதிவு தற்போது இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.
நிற அரசியல்.. பிரியா வாரியரைச் சங்கடப்படுத்திய கேள்வி..!
முன்னதாக, வழக்கமாக சமூக அல்லது அரசியல் கருத்துகளைப் பகிராத நடிகை மீனா, தற்போது சாதி மற்றும் மதத்தைக் காட்டிலும் மனிதநேயமே அனைத்திற்கும் மேலானது என்பதை வலியுறுத்தும் விதமாக ஒரு பதிவைப் பகிர்ந்துள்ளார். யாரையும் புண்படுத்தாமல், நல்ல மனிதராக வாழ்வதன் அவசியத்தை மிக எளிமையாகவும் ஆழமாகவும் எடுத்துரைத்துள்ள மீனாவின் இந்தச் சிந்தனைக்கு ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

“சாதியையும் மதத்தையும் விட மனிதநேயம்தான் பெரியது” என்ற அவரது கருத்தை பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து பாராட்டி வருவதுடன், இது தற்போது இணையத்தில் அதிகம் கவனத்தை ஈர்த்து வருகிறது.

