கோவை நொய்யல் ஆற்றங் கரையில் அமைந்து உள்ள பேரூர் பட்டீஸ்வரர் கோவில், சுமார் 2,000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான, கரிகால் சோழனால் (கி.பி. 2-ஆம் நூற்றாண்டு) கட்டப்பட்ட, காமதேனு வழிபட்ட சுயம்பு லிங்கத் தலமாகும். தேவாரப் பாடல் பெற்ற இத்தலம், மேல சிதம்பரம் என்று பக்தர்களால் போற்றப்படும் கோவையில் புகழ்பெற்ற ஆன்மீகத் தலமான பேரூர் பட்டீஸ்வரர் கோயில் இங்கு உள்ள பழமையான தேரில் வெள்ளிப் பொருட்கள் காணாமல் போன வழக்கில், இன்று நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கி உள்ளது.
இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தன் என்பவருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டு உள்ளார். புனிதமான கோயில் வளாகத்திலேயே ஊழியர் ஒருவரே கைவரிசை காட்டிய சம்பவம் இப்பகுதி மக்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
5 அடுக்கு பாதுகாப்பு: 11 பகுதிகள் ‘ரெட் ஜோன்’-500 போலீசார் தீவிர கண்காணிப்பு..!
கடந்த 2014 ம் ஆண்டுக்கு முன்பு பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் பொருத்தப்பட்டு இருந்த விலைமதிப்பற்ற பொருட்களில் வெள்ளிப் பொருட்கள் மாயமானதை அடுத்து, கோயில் நிர்வாகம் தரப்பில் பேரூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாகப் போலீசார் நடத்திய விசாரணையில், அதே கோயிலில் பணியாற்றி வந்த ஊழியர் ஆனந்தன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, கோவை ஜே.எம்: 3 (JM: 3) நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.
இந்த வழக்கின் இறுதி விசாரணை இன்று நீதிபதி செல்வம் முன்னிலையில் வந்தது. அனைத்து தரப்பு சாட்சியங்கள் மற்றும் ஆதாரங்களை ஆய்வு செய்த நீதிபதி, அரசு ஊழியராக இருந்து கொண்டே இத்தகைய குற்றத்தைச் செய்த ஆனந்தன் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதாகக் கருதினார். இதனை அடுத்து, குற்றவாளி ஆனந்தனுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனையும், பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

