Author: Prime Reporter
நடிகரும், தவெக தலைவருமான விஜய், அரசியலில் நுழைந்தது முதல் பல்வேறு விமர்சனங்களை சந்தித்து வருகின்றார். 2026 தேர்தல் வருவதற்குள் மாதம் மாதம் அவர் சந்தித்த நல்லது, கெட்டது குறித்து விரிவாக பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்.. தவெக தலைவர் கடந்த 2025ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி கரூர் மக்களை சந்தித்து பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அங்கு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். அந்த சம்பவம் நடந்தேறிய போது, உடனே விஜய், விமானத்தில் சென்னைக்கு பறந்து விட்டார். இது கடும் விமர்சனங்களை சந்தித்தது. மேலும் விஜய்க்கு மனிதாபிமானமே இல்லை, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை நேரில் பார்க்க கூட மனம் இல்லை என விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டன. தொடர்ந்து அக்டோபர் மாதம் 27ஆம் தேதி, கரூர் கூட்ட நெரிசலில் பலியானோர்களின் குடும்பத்தினரை பனையூர் அலுவலகத்திற்கு வர வைத்து அவர் சந்தித்து பேசினார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு காசோலையும், ஆறுதலையும் தெரிவித்தார்.…
எஸ்.ஏ.சி, விஜய், சங்கீதா குறித்து குடும்ப விவகாரம் மீண்டும் பேசுபொருளாகி சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துகள் பரவி வருகிறது.
தமிழ்நாடு முழுவதும் சென்சேஷனல் செய்தியாக மாறியுள்ளது விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கை. செங்கல்பட்டு நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கை தாக்கல் செய்துள்ளார் தவெக தலைவர் விஜயின் மனைவி சங்கீதா. வழக்கு தொடுத்தது முதல் சோஷியல் மீடியா முழுவதும் விஜய் மற்றும் சங்கீதா குறித்தும் நெட்டிசன்கள் பல மீம்ஸ்களை போட்டு வருகின்றனர். குறிப்பாக சங்கீதா சொன்ன அந்த நடிகை இவர்தான் என நெட்டிசன்கள் பலத்த எதிர்ப்பை காட்டி வருகின்றனர். விவாகரத்து வழக்கு தாக்கல் செய்த சங்கீதா சில விஷயங்கள் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சங்கீதா குறிப்பிட்டுள்ளதாவது, 2021ஆம் ஆண்டு முதல் மனதளவிலும், உணர்வுப்பூர்வமாகவும் விஜய் என்னை பிரிந்து வாழ்ந்து வருகிறார். விஜய் தன்னுடைய திருமண, சமூக மற்றும் தொழில் வாழ்க்கையில் இருந்து முழுவதுமாக என்னை விலக்கி வைத்துவிட்டார். விஜய்யின் திருமணத்தை மீறிய உறவால் 2021ஆம் ஆண்டு முதல் ஒரே வீட்டில் இருந்தாலும் தனித்தனியாக வசித்து வருகிறோம். எனது கணவர் விஜய் தொடர்ந்து நடிகையுடன் வெளிநாட்டுக்கு…
நடிகர் விஜய், சினிமாவை விட்டு விலகி அரசியலில் நுழைந்துள்ளார். தவெகவை ஆரம்பித்து 2 வருடங்கள் முடிந்த நிலையில், 2026 சட்டப்பேரவை தேர்தல் தான் தனது இலக்கு என அறிவித்துள்ளார். மேலும் தேர்தலுக்காக மெனக்கெட்டு பணியாற்றி வரும் சூழலில், விஜய் திமுகவை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் விஜய்யை விவாகரத்து செய்ய வேண்டி மனு தாக்கல் செய்துள்ளார் அவரது மனைவி. இது சினிமா வட்டாரத்தை விட அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை உண்டாக்கியுள்ளது. விஜய் – சங்கீதா சமீப காலமாக பிரிந்து வாழ்ந்து வருவதாகவும், எல்லா நிகழ்ச்சியிலும் சங்கீதா இல்லாமல் தனியாக விஜய் பங்கேற்றிருந்தார். எது உண்மை என தெரியாமல் இருந்த நிலையில், சங்கீதாவின் விவாகரத்து மனு அது ஊர்ஜிதப்படுத்தியுள்ளது. தற்போது இந்த விவாகரத்து பஞ்சாயத்து சமூக வலைதளங்களில் டிரெண்டாகியுள்ளது. செங்கல்பட்டு நீதிமன்றத்தில் விஜய் மனைவி சங்கீதா விவாகரத்து மனு அளித்துள்ள நிலையில், அந்த மனுவில் கூறியுள்ள தகவல் ரசிகர்கள்…
நடிகர்கள் சிவகார்த்திகேயன் மற்றும் அஜித் குறித்து வெளியாகியுள்ள புதிய தகவல்கள் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாமக செயல் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்சட்டி அருகில் கவுண்டன் கொட்டாய் கிராமத்தில் இரண்டரை வயது குழந்தையை கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்ததாக திமுக இளைஞரணி நிர்வாகி பெரியநாயகம் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். தெய்வமாகக் கொண்டாடப்படவேண்டிய குழந்தையை திமுகவைச் சேர்ந்த மனித மிருகம் ஒன்று கொடூரமான முறையில் வேட்டையாடியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இந்த மனித மிருகத்தை தப்பவிடக் கூடாது. திமுக ஆட்சிக்கு வந்த பின்னர், தமிழ்நாடு முழுவதும் பாலியல் வன்கொடுமைகள், கொலைகள், கொள்ளைகள் என அனைத்து வகையான குற்றங்களும் அதிகரித்துவிட்டன. கவுண்டன் கொட்டாய் கிராமத்தில் இரண்டரை வயது குழந்தையை திமுக நிர்வாகி சீரழித்ததைப் போலவே தமிழகத்தில் நடைபெறும் பெரும்பான்மையான குற்றங்களுக்கு திமுக நிர்வாகிகள் தான் காரணமாக உள்ளனர். திமுக ஆட்சிக்கு வந்துவிட்டாலே அக்கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகளுக்கு போதை மருந்து கடத்தல், பாலியல் வன்கொடுமை, கொலை, கொள்ளை உள்ளிட்ட அனைத்துக் குற்றங்களையும் செய்வதற்கு…
எட்டிமடை சோதனைச் சாவடியில் வாகன சோதனையின் போது ரூ.16,30,000 பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
நடிகர் மற்றும் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி தொடர்பான புதிய திரைப்பட அப்டேட்கள், சமூக கருத்துக்கள் ரசிகர்களிடம் பேசுபொருளாகியுள்ளது.
நடிகை சமந்தா சமீபத்திய ஓபன் டாக் பேட்டியில் தனது வாழ்க்கை, சினிமா மற்றும் சவால்கள் குறித்து மனம் திறந்து பகிர்ந்தார்.
பால்மணம் மாறாத மழலைகள் மீது தொடர்ந்து பாலியல் வேட்டை நடத்திய திமுக பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ளதற்கு பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே, திமுக இளைஞர் அணி கிளைச் செயலாளராக இருக்கும் பெரியநாயகம் என்ற மிருகத்தின் பாலியல் வெறிக்கு, 2 வயது பெண் குழந்தை பலியாகியுள்ள செய்தியறிந்து எனது ஈரக்குலையே நடுங்குகிறது. பால்மணம் மாறாத மழலைகள் மீது தொடர்ந்து பாலியல் வேட்டை நடத்தும் கயவர் கூட்டத்தினைக் கூண்டோடு கொன்றொழித்து விடுமளவிற்கு கோபம் வருகிறது. “திமுககாரன்” என்ற ஒற்றை அடைமொழியை வைத்துக் கொண்டு, உடல்ரீதியாகவும் உணர்வு ரீதியாகவும் பெண்கள் மீது பாலியல் தாக்குதல்களைத் தொடுக்கும் உடன்பிறப்புகளைக் கட்டுப்படுத்த வேண்டிய திரு. ஸ்டாலின் அவர்கள், அவர்களுக்குக் கட்சிப் பதவி கொடுத்து தமது கூடாரத்திற்குள் கொண்டாடி மகிழ்வது வெட்கக்கேடானது. அரசியல் வேறுபாடுகளை எல்லாம் கடந்து, எனது ஆன்மாவின்…
