அதிகாரிகள் மீது ஆக்ஷன் பாயும், வேலை செய்யாதவங்க வீட்டுக்கு அனுப்பப்படுவாங்க”
கூடுதல் குடிநீர் கனெக்ஷனை கட் பண்ணுங்க”நான் ஸ்ட்ரெய்ட் ஃபார்வேர்ட் ஆள், வேலை செய்யாட்டி தூக்கிடுவேன் என அதிகாரிகளுக்கு டோஸ் விட்டு எச்சரிக்கை செய்த
சூலூர் எம்எல்ஏ சுகுமார்.
கோவை மாவட்டம் சூலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், அனைத்துத் துறை அதிகாரிகள், செயலாளர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்குச் சூலூர் சட்டமன்ற உறுப்பினர் (எம்எல்ஏ) சுகுமார் தலைமை தாங்கினார்.
வேகம் எடுக்கும் தவெக எம்.எல்.ஏ.. ஆரம்ப சுகாதார நிலையத்தில் திடீர் விசிட்..!
அவர் சட்டமன்ற உறுப்பினராகப் பொறுப்பேற்ற பின்பு நடைபெறும் முதல் சந்திப்புக் கூட்டம் என்பதால், இதில் கலந்துகொண்ட அதிகாரிகளின் குறைகளையும், தேவைகளையும் கேட்டறிந்தார்.தொடர்ந்து கூட்டத்தில் பேசிய எம்எல்ஏ சுகுமார், அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் நேரம் காலம் பார்க்காமல் மக்கள் நலனுக்காக உழைக்க வேண்டும் என்றும், அலுவலகப் பணி முடிந்தவுடன் வீட்டிற்குச் செல்வதை மட்டுமே நோக்கமாக வைத்துக்கொண்டு இயங்கக் கூடாது என்றும் அறிவுறுத்தினார்.
மேலும், தான் மிகவும் நேர்மையான முறையில் (ஸ்ட்ரெய்ட் ஃபார்வேர்ட்) செயல்படக்கூடிய ஆள் எனக் குறிப்பிட்ட அவர், விதிகளுக்குப் புறம்பாக ஒரே வீட்டில் அதிகப்படியான குடிநீர் குழாய் இணைப்புகள் (கனெக்ஷன்கள்) வைத்திருந்தால், அவற்றை அதிகாரிகள் உடனடியாகத் துண்டிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சரியாக வேலை செய்யாதவர்கள் உடனடியாகப் பணியிட மாற்றம் செய்யப்படுவார்கள் என்றும் கூட்டத்தில் கடுமையாக எச்சரித்தார். அதிகாரிகள் கூட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் மற்றும் கட்சியினரும் கலந்து கொண்டது அதிகாரிகள் இடையே அதிருப்தி சலசலப்பையும் ஏற்படுத்தியது.

