Author: Prime Reporter
மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மேம்படுத்துவதற்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. நாளை தமிழகத்திற்கு பிரதமர் மோடி வரும் நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ள நிலையில், காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மேம்படுத்துவதற்கு மத்திய அமைச்சரவை இறுதியாக ஒப்புதல் அளித்துள்ளது. கடந்த ஆறு ஆண்டுகளாக, சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்துக்கு எழுதிய கடிதங்கள், பாராளுமன்றத்தில் எழுப்பிய விவாதங்கள் மற்றும் நேரடி சந்திப்புகள் மூலம் நாங்கள் பலமுறை தொடர்ந்து முன்வைத்து வந்த நீண்டநாள் கோரிக்கையே இது. பல ஆண்டுகளாக கோரிக்கைகளும் நினைவூட்டல்களும் சென்ற பிறகே இப்போது இந்த ஒப்புதல் வந்துள்ளது — அதுவும் 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு வந்திருப்பது கவனிக்கத்தக்கது. இருப்பினும், இது மதுரை மக்களுக்கும் தென் தமிழ்நாட்டின் முழுப் பகுதிக்கும் ஒரு முக்கியமான முன்னேற்றமான படியாகும்.…
இந்து மக்கள் கட்சி மாநாட்டுக்கு தமிழக அரசு அனமதி மறுத்துள்ளதற்கு தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், இந்து மக்கள் கட்சி சார்பில், மார்ச் 15 ஞாயிற்றுக்கிழமை அன்று, சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறவிருந்த தமிழ் தமிழர் தமிழகம் உரிமை மீட்பு மாநாட்டிற்கு, திமுக அரசு தடை விதித்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. ஒரு அரசியல் கட்சி மாநாட்டுக்கு அனுமதி மறுப்பது, விளம்பரங்களை அகற்றுவது, இந்து மக்கள் கட்சி நிர்வாகிகளை மிரட்டுவது உள்ளிட்ட திமுக அரசின் செயல்பாடுகள், தமிழகத்தில் ஜனநாயகத்தின் நிலையை கேள்விக்குறியாக்குகின்றன. தமிழகத்தில் திமுக கூட்டணிக் கட்சிகள், காவல்துறையின் முழு ஆதரவோடு, நமது நாட்டுக்குச் சற்றும் தொடர்பே இல்லாத பிரச்சினைகளுக்கெல்லாம், எந்தத் தடையும் இன்றி, கூட்டங்கள், பேரணிகள் நடத்திக் கொண்டிருக்கின்றன. ஆனால் இந்து சமய மக்கள் ஒற்றுமை பேரணிக்கும், உள்ளரங்கில் நடைபெறும் மாநாடு மற்றும் கருத்தரங்கம், பொதுக்கூட்ட…
தமிழகத்தில் பட்டியலின சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு எதிராக நடந்து வரும் சாதிய கொடுமைகள் குறித்து நடவடிக்கை எடுக்க திமுக அரசு அக்கறையும் காட்டவில்லை என இயக்குநர் பா.ரஞ்சித் குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், மானாமதுரையில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ஆகாஷ் (26) கடந்த (06.03.2026) அன்று காவல்துறையினரால் சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்டார். கொலை நடந்து மூன்று நாட்கள் ஆகியும் இப்போது வரை சம்மந்தப்பட்டவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக இருக்கிறது அரசும் காவல்துறையும். 4 ஆண்டுகளில் 24 காவல் மரணங்கள் என்பது சாதாரணமாக கடந்துபோகக் கூடிய ஒன்றல்ல என மதுரை உயர்நீதிமன்றம் கண்டித்திருந்தது. அதற்குப் பின் இரண்டு பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள், தற்போது ஆகாஷ் என்கிற இளைஞர். மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு மோசமான நிலையில் இருக்கிறது. அதிலும் பட்டியல் சமூக மக்கள் சம்மந்தப்பட்ட விவகாரங்களில் அவை இன்னும் அலட்சியமாகக் கையாளப்படுகின்றன. காவல்துறைக்கும் ஆட்சியாளர்களுக்கும் பட்டியல் சமூக மக்கள் மீது…
வளைகுடா நாடுகளுக்கு இடையே நடந்து வரும் கோர் கரணமாக பெட்ரோலிய பொருட்கள் இந்தியா கொண்டு வருவது பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டு, இந்தியா முழுவதும் பல ஹோட்டல்கள் மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரான்- இஸ்ரேல் , வளைகுடா நாடுகளுக்கு இடையே நடைபெற்று வரும் போர் காரணமாக பெட்ரோலிய பொருட்களை இந்தியாவுக்கு கொண்டுவருவதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. இதன் காரணமாக வணிக மற்றும் தொழிற்சாலை பயன்பாட்டுக்கான சிலிண்டர் விநியோகத்தைத் தற்காலிகமாக நிறுத்துவதாக இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது. LPG-க்கு மாற்றாக வேறு எரிபொருளை பயன்படுத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது. தமிழகத்தில் ஏற்கெனவே சில மாவட்டங்களில் சிலிண்டர்கள் கிடைக்காததால் உணவகங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சினை மேலும் தீவிரமடையாமல் இருக்க, உரிய நடவடிக்கைகளை எடுத்து , தக்க நேரத்தில் சிலிண்டர்கள் கிடைக்க ஆவண செய்ய வேண்டும் என மத்திய அரசை…
நடிகை சாரா அர்ஜுன், வெளிப்படையான கருத்துகளைப் பகிர்ந்துள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த படத்துக் பிறகு வடிவேலுவுடன் 16 படங்களை நிராகரித்தார்; காரணம் தன்மானமும் காமெடி அணுகுமுறை குறித்த மாற்றம்.
போர் சூழல் காரணமாக சிலிண்டர் தட்டுப்பாடு நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள நிலையில், அண்டை மாநிலங்களில் ஓட்டல்கள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சிலிண்டர் தட்டுப்பாட்டை நீக்க வேண்டும் என தமிழக அரசுக்கு எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில், பாமக செயல் தலைவர் அன்புமணி சில யோசனைகளை கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், வளைகுடா போரால் ஏற்பட்டுள்ள சூழல் காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு உருளைகள் வினியோகம் நிறுத்தப்பட்டிருக்கும் நிலையில், நாளை அல்லது நாளை மறுநாள் முதல் தேநீர் கடைகள் முதல் நட்சத்திர விடுதிகளின் உணவகங்கள் வரை அனைத்து வகையான உணவகங்களும் மூடப்படும் நிலை உருவாகியுள்ளது. அப்படி ஒரு நிலை ஏற்படுவதை நினைத்துப் பார்க்கவே கவலையாக உள்ளது. தேநீர்கடைகள், சிற்றுண்டிகள், உணவகங்கள் போன்றவை தனித்த வணிகங்கள் அல்ல. உணவகங்களுக்கு தேவையான உணவு தானியங்கள் உள்ளிட்ட மூலப்பொருள்கள் கொள்முதல், உணவு வகைகள் தயாரிக்கப்பட்ட பிறகு…
அனிருத் அலு அர்ஜுன் படத்திற்காக 20 கோடி சம்பளம் கேட்டார், தயாரிப்பாளர்களுக்கு அதிர்ச்சி, தெலுங்கு சினிமாவில் பரபரப்பு.
நடிகர் மன்சூர் அலிகானின் சமீபத்திய சர்ச்சை மற்றும் அவரது அரசியல் நகர்வுகள் குறித்த முக்கிய தகவல்கள் மற்றும் தற்போதைய நிலவரங்களை இந்தச் செய்தி தொகுப்பு விளக்குகிறது.
இளைஞர் மரணம் குறித்து சிபிசிஐடி விசாரணை பற்றி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை முக்கிய தகவல் கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் விசாரணைக்காக கைது செய்யப்பட்ட இளைஞர் ஆகாஷ் உயிரிழந்த சம்பவம் மிகுந்த வேதனை அளிக்கிறது. காவல் துறையின் பாதுகாப்பில் இருக்கும் ஒரு குடிமகனின் உயிர் பறிபோவது சமூகத்தில் பதட்டத்தை ஏற்படுத்தும் சம்பவமாகும். ஒரு நபர் காவல் துறையின் கட்டுப்பாட்டில் இருப்பவரின் உயிர் மற்றும் மனித உரிமைகள் முழுமையாக பாதுகாக்கப்பட வேண்டும் என்பது சட்டத்தின் பொறுப்பாகும். எனவே, இந்த சம்பவத்தின் உண்மை நிலை முழுமையாக வெளிச்சத்துக்கு வரவேண்டும் என்ற நோக்கில் தமிழ்நாடு அரசு இந்த வழக்கை சிபிசிஐடி வசம் ஒப்படைத்துள்ளது ஆறுதல் அளிக்கிறது. சிபிசிஐடி விசாரணையில் உயிரிழப்பின் உண்மை தன்மை வெளிப்படும். சிபிசிஐடி விசாரணையை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் வரவேற்கிறேன். இந்த துயரமான நேரத்தில் உயிரிழந்த இளைஞர் ஆகாஷின் குடும்பத்தினருக்கு…
