உங்களுடைய கை, முகம், கால்களை விட கழுத்து பகுதி மட்டும் மிகவும் கருப்பாக இருக்கிறது என்ற கவலையா? அதிகமாக வெயில்படும்போது கருமை அடையும். இதை சன் டன் என்று அழைப்பார்கள். இது நமது சருமத்தின் நிறத்திற்கு காரணமான மெலனின் என்னும் நிறமி அதிகமாக உற்பத்தி செய்யப்படுவதால் நிகழ்வது.
மேலும், இந்த மெலனின் சூரியனின் புற ஊதா கதிர்களால் ஏற்படும் பாதிப்பிலிருந்து நமது சரும செல்களை பாதுகாக்கிறது. இப்படி கருப்பாக இருக்கக்கூடிய கழுத்து பகுதியை இயற்கை பொருட்களைக் கொண்டு பராமரிக்கும் பொழுது அந்தப் பகுதியில் இருக்கக்கூடிய கருமை குறைவதை கண்கூடாக காணலாம்.

என்னதான் முகம், கை, கால் அழகாக இருந்தாலும் உங்கள் கழுத்துப் பகுதி மட்டும் மிகவும் கருப்பாக இருந்தால் சங்கடம்தான். அதிகமாக வெயில் வெளிப்படும் போது உங்கள் கழுத்து பகுதி கருமை அடையும். இதை சண் டன் என்று கூறுவார்கள்.
புகைப்பிடிக்காதவர்களையும் தாக்கும் வாய்ப்புற்றுநோய்.. இந்த மாற்றங்கள் சாதாரணமானவை அல்ல..!
குறிப்பாக, நமது சருமத்தின் நிறத்திற்கு காரணமான மெலனின் என்னும் நிறமே அதிகமாக உற்பத்தி செய்யப்படுவதால், இந்த நிகழ்வு நிகழ்வுகிறது. எப்போது, கழுத்து பகுதி நேரடியாக சூரிய ஒளியில் படுகிறதோ அப்போது சூரிய கதிர்களால் கருமை அடைவதற்கான வாய்ப்பு ஏற்படுகிறது.
கருவளையம் மற்றும் கரும்புள்ள நீங்க

உருளைக்கிழங்கு சாறு மற்றும் தக்காளி சாறு ஆகியவற்றைச் சம அளவில் எடுத்து நன்றாகக் கலந்துகொள்ள வேண்டும். இந்த கலவையை முகம் மற்றும் கண்கள், கழுத்துச் சுற்றிலும் தடவி 15 நிமிடங்கள் ஊற வைக்கவும். பின்னர் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவினால், வெயிலால் ஏற்பட்ட கருமை (Sun tan) நீங்கி முகம் பிரகாசமாகும்.
மிருதுவான சருமத்திற்கு
நன்றாக அரைத்த உருளைக்கிழங்கு விழுதுடன் ஒரு ஸ்பூன் சுத்தமான தேன் கலந்து முகத்தில் ஃபேஸ்பேக் போலப் போட வேண்டும். 20 நிமிடங்கள் கழித்து முகத்தை மசாஜ் செய்து கழுவினால், வறண்ட சருமம் நீங்கி முகம் எப்போதும் ஈரப்பதத்துடன் பளபளப்பாக இருக்கும்.

