புகைப்பழக்கம் ஒரு மோசமான பழக்கமாகும். உலகில் புகையிலை பயன்படுத்துபவரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதுவும், கொடிய பழக்கமானது உயிருக்கே உலை வைக்க கூடிய ஆபத்தையும் உண்டு பண்ணுகிறது. புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கிறது. எனவே இந்த புகைப்பழம் கேடு. அதனால், ஏற்படும் உயிரிழப்புகள் மற்றும் அவற்றின் பயன்பாட்டை குறைப்பது குறித்து உலக அளவில் மக்களிடையே பல்வேறு விழிப்புணர்வுகளும் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.
பொதுவாக புகை பிடிப்பவர்கள் அல்லது புகையிலை பொருட்களை பயன்படுத்துபவருக்கே வாய் புற்றுநோய் ஏற்படும் என்பது நீண்ட காலமாக இருந்து வருகிறது. ஆனால், சமீப ஆண்டுகளில் குறிப்பாக 30 லிருந்து 30 வயதிற்குள் இருக்கும் இளைஞர்களிடையே அதுவும் புகை பிடிக்காதவர்களிடையே வாய் புற்றுநோய் அதிகரித்து வருவது அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.

வாய் புற்றுநோய் எதனால் வருகிறது?
பாசிவ் ஸ்மோக்கிங்
வாய் புற்றுநோய்க்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக பாசிவ் ஸ்மோக்கிங் குறிப்பிடப்படுகிறது. வீட்டிலோ அல்லது வேலை செய்யும் இடங்களிலோ ஒருவர் புகை பிடிக்கும் போது அதன் நச்சுப் புகையை தொடர்ந்து சுவாசிப்பதாலும் உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தி நீண்ட காலத்திற்கு இந்த மறைமுக புகை வாய் புற்றுநோய் உருவாக காரணமாக அமைந்து விடுகிறது.
மதுப்பழக்கம்
மது பழக்கம் தற்போது அதிகரித்து வருகிறது. அதுவும் வாய்ப்புற்று நோய்க்கு முக்கிய காரணிகளில் ஒன்றாக கருதப்படுவது மதுப்பழக்கம். அதிகமாக, மது அருந்தும் பழக்கம் உடலில் செல்களை பாதித்து புற்றுநோய் உருவாக்கும் அபாயத்தையும் அதிகரிக்கிறது. வைரஸ் தொற்றினால் வாய் புற்று நோயுடன் தொடர்புடையதாக மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த வைரஸ் பெரும்பாலும் பாலியல் தொடர்புகள் மூலம் பரவக்கூடியது. சரியான சிகிச்சை பெறாமல் விட்டால் இளம் வயதில் புற்றுநோய் ஏற்படும் அபாயம் ஏற்பட்டு விடும்.
வாழ்க்கை முறை மாற்றங்கள்
இன்றைய காலத்தில் அதிக அளவில் ஜங்க் உணவுகள் பதப்படுத்தப்பட்ட உணவுகள் அதிக எண்ணெய் மற்றும் சர்க்கரை கொண்ட உணவுகள் போன்றவற்றை தொடர்ந்து உட்கொள்வது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கிறது. இதனால், பல்வேறு நோய்கள் உருவாகும். ஆபத்தையும் ஏற்படுத்துகிறது. அது மட்டும் இல்லாமல் இதனால் மன அழுத்தம், தூக்கமின்மை, உடற்பயிற்சி இல்லாத வாழ்க்கை முறை போன்ற காரணிகளும் உடலில் இயல்பான நோய் எதிர்ப்பு திறனை பாதிக்கின்றன. இதற்கு கூடுதலாக கூர்மையான பற்கள் காரணமாக ஏற்படும்.
சிறுநீரகக் கற்களைக் கரைக்கும் இயற்கை மருந்து.. கொழுப்பைக் கரைக்கும் சூப்பர் ஃபுட்..!
நீண்ட நாட்கள் ஆறாத புண்கள் கூட சில நேரங்களில் கேன்சருக்கான ஆரம்ப அறிகுறியாகவே கருதப்படுகிறது. பலராலும் சாதாரண பிரச்சினையாகவே எடுத்துக் கொள்ளப்பட்டாலும், குறிப்பாக நீண்ட நாட்கள் ஆறாத புண் வலி இல்லாத வெள்ளை அல்லது சிவப்பு தழும்புகள் நாக்கு அல்லது கண்ணப்பகுதிகளில் கட்டி அல்லது வீக்கம் காரணமாக இன்றி ரத்தப்போக்கு குரல் மாற்றம் விளங்குவதில் சிரமம் போன்றவை ஆரம்பகால எச்சரிக்கை அறிகுறிகள் ஆகும்.

புற்றுநோய் என்றால், கண்டிப்பாக வலி இருக்கும் என்பது தவறான நம்பிக்கை. ஆரம்ப நிலையில், பல கேன்சர்கள் எந்தவித வலியும் ஏற்படுத்தாமல் இருக்கலாம். ஆனால், மேற்கொண்ட அறிகுறிகள் நீடித்தால் அவற்றை அலட்சியப்படுத்தாமல் உடனடியாக மருத்துவரை அணுகி பரிசோதனை செய்வது சிறந்தது.
வாய் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால், முழுமையாக குணப்படுத்தும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. இளைஞர்களிடையே வாய்ப்புற்று நோய் அதிகரித்து வருவது சமூக அளவில் ஒரு எச்சரிக்கை மணியாக பார்க்கப்பட வேண்டும். விழிப்புணர்வும் ஆரம்ப பரிசோதனையும் உயிர்களை காப்பாற்றக்கூடிய முக்கிய நடைவடிக்கை என்பது அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய ஒன்று.
குறிப்பு: இந்த கட்டுரையில் சொல்லப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காகவே. இதன் உண்மைத் தன்மை, துல்லியம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றுக்கு UTN NOW பொறுப்பாகாது.

