தேவையான பொருட்கள்
- 4 (பொடியாக நறுக்கியது) பழுத்த தக்காளி
- 2 பெரிய வெங்காயம்
- 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
- தலா அரை ஸ்பூன் கடுகு, சோம்பு
- தேவையான அளவு கறிவேப்பிலை, கொத்தமல்லி
- 2 ஸ்பூன் குழம்பு மிளகாய்த்தூள்
- கால் ஸ்பூன் மஞ்சள் தூள்
- 3 ஸ்பூன் நல்லெண்ணெய் அல்லது சமையல் எண்ணெய்
- தேவையான அளவு உப்பு
செய்முறை
Step 1: ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கடுகு, சோம்பு மற்றும் கறிவேப்பிலை போட்டுத் தாளிக்க வேண்டும். பின்னர், பொடியாக நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாக வரும் வரை வதக்கவும்.
10 நிமிடத்தில் கமகமக்கும் டிபன் சைட்டிஷ்.. தேங்காயும் பொட்டுக்கடலையும் போதும்..!
Step 2: இதனுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்துப் பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும். அடுத்து, நறுக்கி வைத்துள்ள தக்காளியைச் சேர்த்து, தக்காளி நன்றாகக் குழைந்து எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்க வேண்டும். தக்காளி வதங்கியதும் மஞ்சள் தூள், குழம்பு மிளகாய்த்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து ஒரு நிமிடம் கிளறவும்.
Step 3: இப்போது குழம்பிற்குத் தேவையான அளவு தண்ணீர் (சுமார் 1 முதல் 2 டம்ளர்) ஊற்றி, பச்சை வாசனை நீங்கி குழம்பு திக்காகும் வரை மிதமான தீயில் 10 நிமிடங்கள் கொதிக்க விட இறுதியாக, பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழையைத் தூவி இறக்கினால், நாவில் எச்சில் ஊறவைக்கும் கிராமத்துச் சுவை தக்காளி குழம்பு ரெடி.

