Author: Prime Reporter
கோவை மருதமலை சுப்பிரமணியசாமி கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
கோவையில் ஆயுர்வேத மருத்துவரின் தாயார் கஸ்தூரி கொலை வழக்கில் நேபாளத்தைச் சேர்ந்த இருவர் பெங்களூருவில் கைது செய்யப்பட்டனர்.
கோவை பெரியதடாகம் பகுதியில் வனப்பகுதியிலிருந்து வழிதவறி வந்த புள்ளிமானை, தெருநாய்கள் கடித்து குதறியதில் காலில் பலத்த காயம் ஏற்பட்டது.
கோவை பொள்ளாச்சி அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை, மனைவி மற்றும் அவரது கள்ளக்காதலன் நண்பர்களுடன் சேர்ந்து காரில் கடத்தி பீர் பாட்டிலால் தாக்கி கொலை செய்து வாய்க்காலில் வீசிய கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்தைச் சேர்ந்த பாஸ்கரன் சாலை விபத்தில் மூளைச் சாவு அடைந்த நிலையில், அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டு 3 பேருக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது.
தவெக தலைவர் விஜய் இன்று தனது எக்ஸ் தளப்பக்கத்தில் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கழகத் தோழர்களுக்கு வணக்கம். விகிதாசாரப் பிரதிநிதித்துவத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், தமிழ்நாடு அரசு சாதிவாரி கணக்கெடுப்பு ஆய்வுக்கான (Caste-survey) அரசாணையை உடனடியாக வெளியிடக் கோருகிறோம். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டையும் தமிழகம் எங்கும் பரவலாகி வரும் போதைப் பொருட்களையும் தடுக்கத் தவறிய தமிழக அரசைக் கண்டிக்கிறோம். அரசியல் கட்சிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் என்ற பெயரில், அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் அவர்களது மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை முடக்கும் வகையிலும் நீர்த்துப் போகச் செய்யும் வகையிலும், அறவே ஜனநாயகமற்ற முறையிலான வழிகாட்டு நெறிமுறைகளைத் திரும்பப் பெற வலியுறுத்துகிறோம். இவற்றை வலியுறுத்தி, தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில், வரும் 12ஆம் தேதி (12.03.2026) காலை 10 மணிக்கு, தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில்…
கோவை வடவள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தனது சொந்த வீடாக மாற்றி, திமுக பிரமுகர் குடும்பத்துடன் குடியேறிய விவகாரம் சமூக வலைதளங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு இடையூறாக நடனமாடி சமூக வலைதளத்தில் பதிவிட்ட கேரள யூடியூபருக்கு காட்டூர் போலீசார் சம்மன் அனுப்பி விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரசியல் கட்சி ஆரம்பித்த விஜய்க்கு ஆதரவு பெருகி வந்த சூழலில் தனிப்பட்ட வாழ்க்கை விவகாரம், அவரது வாக்கு வங்கியை பாதிக்கும் சூழல் உருவாகியுள்ளது. சமீப நாட்களாக விஜய் அவரது மனைவி மற்றும் திரிஷா குறித்த பேச்சுதான் இணையத்தில் அதிகமாக வைரலாகும் விஷயமாக மாறியுள்ளது. இந்த சூழலில் விஜய் பற்றி சர்ச்சை பேச்சு பேசியதாக எழுந்த புகாருக்கு நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் மறுப்பு தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பக்கத்தில், விஜய் அவர்களின் தனிப்பட்ட விஷயங்கள் பற்றியும், அவருடைய அரசியல் வருகை பற்றியும் நான் எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை. விஜயை நான் அறிந்தது ஒரு மரியாதையான, அமைதியான, மென்மையான இணை நடிகராக மட்டுமே. அவருடைய தாயாரைப் பற்றியும் எனக்கு மிகுந்த மரியாதை உள்ளது. அதற்கும் மேலாக எனக்கு எந்த தனிப்பட்ட அறிவும் இல்லை. சமீபத்தில் நான் ஒரு மேடையில் பேசிய சில வார்த்தைகள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு, விஜயின் அரசியல் வருகைக்கும்…
திரிஷா குறித்து கூறிய சர்ச்சை பேச்சுக்கு நடிகர் பார்த்திபன் வருத்தம் தெரிவித்தார்; அந்த நேரத்தில் கை தட்டியது விஜய் ரசிகர்கள்தான் என விளக்கம்.
