சூரியனிலிருந்து வெளியாகும் புற ஊதா கதிர்கள் சருமத்தை மிகவும் மோசமாக சேதப்படுத்திவிடும். இதன் விளைவாக சருமத்தின் நிறம் கருமையாக மாறக்கூடும். இந்நிலையில், கோடை காலத்தில் உடலையும் சருமத்தையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்காக பல அழகு குறிப்புகள் உள்ளன.
சருமத்தை இயற்கையான முறையில் பளபளப்பாகவும், பொலிவாகவும் மாற்ற நினைப்பவர்கள், விலையுயர்ந்த அழகுச் சாதனப் பொருட்களைத் தேடிப் போவதை விட, தினசரி உட்கொள்ளும் உணவில் சில மாற்றங்களைச் செய்தாலே போதும். நம் வீட்டில் இருக்கும் எளிய உணவுப் பொருட்கள் மூலமே தோலின் மினுமினுப்பை அசாத்தியமாக அதிகரிக்க முடியும். அதில், ஒன்றுதான் பலாப்பழம்.
முகம் என்றும் இளமையாக இருக்க
2 பலாப்பழச் சுளைகளை நன்றாகப் பழுத்ததாக எடுத்து, விதைகளை நீக்கிவிட்டு மிக்ஸியில் அரைத்துக் கொள்ள வேண்டும். இந்த விழுதுடன் ஒரு ஸ்பூன் காய்ச்சாத குளிர்ந்த பால் சேர்த்து நன்றாகக் கலக்கவும். இந்த ஃபேஸ்பேக்கை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி 20 நிமிடங்கள் ஊறவிட வேண்டும். பின்னர் குளிர்ந்த நீரால் கழுவினால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, சுருக்கங்கள் மறைந்து முகம் இன்ஸ்டன்ட்டாக ஜொலிக்கும்.

உருளைக்கிழங்குடன் ‘அதை’ கலந்தால் மேஜிக் நடக்குமா?.. இன்ஸ்டன்ட் க்ளோ ரகசியம்..!
கரும்புள்ளிகள் மற்றும் பருக்கள் மறைய
பலாப்பழத்தின் கொட்டைகளை சிறிதளவு பாலில் ஊறவைத்து நன்றாக மை போல அரைத்துக் கொள்ள வேண்டும். இந்த விழுதுடன் அரை ஸ்பூன் தேன் கலந்து முகத்தில் கரும்புள்ளிகள் மற்றும் பருக்கள் உள்ள இடங்களில் தடவ வேண்டும். 15 நிமிடங்கள் கழித்து முகத்தைக் கழுவி வந்தால், முகத்தில் உள்ள தழும்புகள் மறைந்து சருமம் பட்டுப் போல மாறும்.

