Author: Prime Reporter

விஜய் முதலில் திரிஷா வீட்டை விட்டு வெளியே வர வேண்டும் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியது அரசியலில் சர்ச்சையை கிளப்பியது. பல அரசியல் கட்சி தலைவர்கள் நயினார் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த நிலையில், திமுகவும் ஒரு பெண்ணை அரசியலுக்குள் இழுத்து பேசுவது அநாகரிகமான செயல் என கூறியது. இதையடுத்து நடிகை திரிஷாவும், இன்று கண்டன அறிக்கையை வெளியிட்டார். தான் எந்த கட்சியுடனும் தொடர்பில்லை, ஒரு தலைவர் இப்படி பேசியது அருவருக்கத்தக்கது என கருத்து தெரிவித்திருந்தார். இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த நயினார் நாகேந்திரன், என்னுடைய அரசியல் வாழ்க்கையில் எந்த ஒரு தனிநபர் விமர்சனத்தை நான் அனுமதித்ததில்லை, நானும் அப்படியிருந்ததில்லை, வாய் தவறி விழுந்த வார்த்தை. வானதி சீனிவாசன் கூட என்னிடம் பேசியிருந்தார். நேற்று அண்ணாமலை வீட்டுக்கு நான் சென்றிருந்த போதும் அவரும் இது பற்றி பேசியிருந்தார். உண்மையில் யாரேனும் இதில் வருத்தப்பட்டிருந்தால் எனது மனப்பூர்வமான வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன்…

Read More

தமன்னா மற்றும் விஜய் வர்மா குறித்து வெளியான புதிய தகவல்கள் வைரல்; உறவு பற்றி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் விவாதம் செய்கிறார்கள்.

Read More

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில் டெண்டர்களையும், ஏலங்களையும் அள்ளி வீசும் திமுக – தேர்தல் செலவுக்காக அரசின் கஜானாவை காலியாக்கத் துடிக்கும் திமுக அரசின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது. தமிழகத்தில் சாலை, குடிநீர் குழாய் சீரமைப்பு உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறை சார்ந்த பணிகளுக்காக கடந்த 15 தினங்களில் மட்டும் சுமார் 5 ஆயிரம் டெண்டர்களும், ஒரே நேரத்தில் 50க்கும் அதிகமான கல்குவாரிகளுக்கு ஏலமும் அவசரகதியில் அறிவிக்கப்பட்டிருப்பதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆட்சிக்கு வந்த ஐந்து ஆண்டுகளில் அரசுத்துறை சார்ந்த பணிகளை மேற்கொள்வதிலும், மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்துவதிலும் மெத்தனப் போக்கையே கடைபிடித்து வந்த திமுக அரசு, சட்டமன்ற தேர்தலுக்கான கால அவகாசம் நெருங்கி வரும் நிலையில், ஒரே நேரத்தில் டெண்டர்களையும், ஏலங்களையும் அள்ளி வீசி அரசு கஜானாவை காலியாக்க முயல்வது கடும் கண்டனத்திற்குரியது. தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு டெண்டர்களையும்,…

Read More

அனிலா ஸ்ரீ குமாரி தொடர்பான சமீபத்திய செய்திகள் வைரல்; சமூக வலைதளங்களில் ரசிகர்கள் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்.

Read More

இணையத்தில் வைரலாகும் பேட்டியில் மகளை பற்றி நடிகர் ஜிதன் ரமேஷ் பகிர்ந்த உருக்கமான தகவல்கள் ரசிகர்களை நெகிழச்செய்தது.

Read More

கடந்த 2023ஆம் ஆண்டு தமிழக பாஜக தலைவராக இருந்த அண்ணாமலை, திமுக ஊழல் பட்டியல் அடங்கிய திமுக ஃபைல்ஸ் என்ற பெயரில் திமுக அமைச்சர்களின் சொத்து விபரங்களை வெளியிட்டார். அதில் திமுக எம்பி டிஆர் பாலு, அவரது மகனும் அமைச்சருமான டிஆர்பி ராஜா உட்பட அவரது குடும்பத்தினரக்கு 21 நிறுவனங்கள் சொந்தமாக உள்ளது என்று குறிப்பிட்டிருந்தார். இதை எதிர்த்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் டிஆர் பாலு அண்ணாமலை மீது அவதூறு வழக்கு போட்டார். இந்த வழக்கில் 21 நிறுவனங்கள், சொத்துக்கள் தொடர்பாக அண்ணாமலையிடம் குறுக்கு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதி செந்தில் குமார் முன்பு விசாரணைக்கு வந்த போது, அண்ணாமலை மற்றும் டிஆர் பாலு ஆஜராகியிருந்தனர். கடந்த 2014ஆம் ஆண்டு, கப்பல் போக்குவரத்துறை அமைச்சராக இருந்த போது டி ஆர் பாலு 10 கப்பல்களை சொந்தமாக வாங்கியதாக மு.க அழகிரி கரத்து தெரிவித்தார், அது குறித்து செய்தித்தாள்கிளில் ஞாபகம்…

Read More

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், சமீபத்தில் பேட்டியில், நடிகை திரிஷாவிடம் இருந்து விஜய் முதலில் வெளியே வர வேண்டும் என பேசியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. அரசியல் கட்சி தலைவர்கள் பலர் நயினார் நாகேந்திரனுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே நடிகர் திரிஷாவும் கண்டனம் தெரிவித்துள்ளார். திரிஷா தனது வழக்கறிஞர் மூலம் அறிக்கை ஒன்றை தனது எக்ஸ் தளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், அரசியலில் நான் நடுநிலையான நிலைப்பாட்டை கொண்டிருக்கிறேன். உயர்ந்த பொறுப்பில் உள்ளவர்கள் நிதானமாக பொறுப்புடன் பேச வேண்டும், தனிப்பட்ட வாழ்க்கை பொது விவாதத்திற்கு உரியது இல்லை. நான் திரைக்கலைஞர் என்பதை மட்டுமே அடையாளப்படுத்த விரும்புகிறேன், அவமரியாதையை ஒரு போதும் ஏற்க முடியாது. இப்படி ஒரு அருவருக்கத்தக்க கருத்தை நான் எதிர்பார்க்கவில்லை, எனக்கு தொடர்பில்லாத விஷயங்களில் எனது பெயரை பயன்படுத்தக்கூடாது என குறிப்பிட்டுள்ளார்.

Read More

இசையமைப்பாளரை மணந்த ரோஷினி ஹரிப்ரியன் திருமண புகைப்படங்கள் வைரல்; ரசிகர்கள் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது சமூக வலைதளங்களில்.

Read More

இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், விஜய் கூட்டத்தில் ஏற்படும் மரண நிகழ்வுகள் குறித்து பேசியிருந்தார். அதில், கூட்டத்தில் இறப்பு நேர்ந்தால் நல்ல சகுனம் தானே என விஜய்யின் ஒவ்வொரு கூட்டத்திலும் மரணம் நிகழ்வது நல்ல சகுனம் தான் என கூறினார். இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள தவெக கொள்ளை பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத், அரசியலில் புதிய பாய்ச்சலை நிகழ்த்தி வரும் தமிழக வெற்றிக் கழகத்தின் எழுச்சியைக் கண்டு அஞ்சும் சக்திகள், இன்று தங்களின் மனிதாபிமானமற்ற முகத்தை வெளிப்படுத்தியுள்ளனர். அறிவாலய கொத்தடிமை ஊதுகுழலாகவே மாறிவிட்ட கமலாலய கள்ளக்கூட்டணி தலைவருக்கு கண்டனம். ஒருவர் உயிரிழந்த நிகழ்வு”நல்ல சகுனம்” என்று கேலி செய்துள்ள பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனின் பேச்சு அடிப்படை மனிதாபிமானம் அற்றது. அரசியல் நாகரிகம் என்பது எதிரிகளுக்கும் பொதுவானது. ஆனால், அதிகார மமதையில் இருப்பவர்களுக்கும், தங்களை அறிவாலயத்தின் “கொத்தடிமை ஊதுகுழலாக” மாற்றிக்கொண்டு செயல்படும் கமலாலயத்தின் “கள்ளக்கூட்டணி” தலைவர்களுக்கும்…

Read More

தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரியின் காரைக்கால் மாவட்டம், காசாக்குடிமேடு, கிளிஞ்சல்மேடு கிராமங்களைச் சேர்ந்த 25 மீனவர்களை, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கைக் கடற்படை கைது செய்துள்ளது. அத்துடன், அவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்துள்ளது. இந்த அடாத செயல், அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் 25 பேரையும் உடனடியாக விடுவித்து, அவர்களது படகுகளையும் மீட்டுத் தர ஒன்றிய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே நேரத்தில், இலங்கை நீதிமன்றத்தால் கடந்த 3ஆம் தேதி விடுவிக்கப்பட்ட பிறகும் தமிழ்நாட்டு மீனவர்கள் 9 பேர், சொந்த ஊருக்குத் திரும்ப முடியவில்லை. அவர்கள் அங்கே பரிதவித்து வருவதாக அவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளது வேதனை அளிக்கிறது. மேலும் தமிழக மீனவர்கள் 3 பேர், இலங்கை நீதிமன்றம் விதித்த அபராதத் தொகையைச் செலுத்த முடியாமல் சிறையில் வாடுகின்றனர். மீனவர்களுக்குத் தொடர்ந்து இதுபோல நிகழ்வதைத் தடுக்க, தமிழக அரசு உருப்படியான எந்த…

Read More