நான் சிங்காநல்லூர் பையன் நிச்சயம் நான் சிங்காநல்லூர் மக்களின் வீடுகளில் ஒருவனாய் பணியாற்றுவேன் என்னை வேண்டுமென்றே சென்னை என உண்மைக்கு புறம்பான தகவலை பரப்புகின்றனர் என சிங்காநல்லூர் தொகுதியில் வெற்றி பெற்ற தமிழக வெற்றி கழக வேட்பாளர் கிரி பிரசாத் தெரிவித்தார்.
முதலமைச்சர் விஜய்.. விசிலடித்துக் கொண்டாடும் திரைப்பிரபலங்கள்..!
சிங்காநல்லூர் தொகுதியில், வெற்றி பெற்ற பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழக வெற்றி கழக வேட்பாளர் கிரி பிரசாத் நிச்சயம் மக்களின் அடிபப்டை தேவைகளை பூர்த்தி செய்வதில் கவனம் செலுத்துவேன் என்றும் , அதிமுக திமுக தன்னை சென்னை என கூறி மக்களிடையே உணமைக்கு புறம்பான செய்தியை பரப்பி விட்டுள்ளனர் நிச்சயம் சிங்காநல்லூர் மக்களின் வீடுகளில் ஒருவனாய் பணியாற்றுவேன் , மக்களை எளிதில் அணுகும் எம் எல் ஏவாக இருப்பேன் என்றார்.

