தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக தொடர்ந்து இரண்டாவது முறையாக வெல்லும் என்ற அதீத நம்பிக்கையில் அண்ணா அறிவாலயத்தின் முகப்பில் திராவிட மாடல் 2.0 டிஜிட்டல் திரை கவுண்டன் வைக்கப்பட்ட நிலையில், தற்போது முடிவு மாறியதால் அந்த திரை தற்போது அகற்றப்பட்டுள்ளது.
குறிப்பாக, கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவால நுழைவாயிலில் பிரம்மாண்டமாக டிஜிட்டல் திரை ஒன்று வைக்கப்பட்டிருந்தது. அதில், லோடிங் என்ற வாசகமும் தேர்தல் முடிவு வெளிவர எவ்வளவு நாள் இருக்கிறது என்பதும் காட்டப்பட்டு வந்தது.
பழைய மரங்கள் வேரோடு சாயும்.. தவெக-வின் வெற்றி குறித்து ஆதவ் அர்ஜுனா நம்பிக்கை..!
இந்த திரை தற்போது, சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், குறிப்பாக எதிர்க்கட்சியினர் மற்றும் நெட்டிசன்கள் ஆட்சி முடியப்போகிறது. அதான் லோடிங் ஆகிறது என்பது போன்ற விமர்சனங்களை முன்வைத்து வந்தனர். சில மீம்ஸ்களில் திமுகவின் தோல்வியில் லோடிங் ஆகிறது என்று கிண்டிலும் செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில், இன்று அந்த டிஜிட்டல் திரை முழுமையாக அகற்றப்பட்டது. இது குறித்து திமுக தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வ விளக்கம் எதுவும் அடிக்கவில்லை. ஆனால், தேர்தல் முடிவு எதிர் பார்த்தபடி இல்லை என்பதால் இனி டிஜிட்டல் கவுண்டன் தேவையில்லை என திமுகவினர் அகற்றியதாக தெரிகிறது.

