தமிழகத்தில் புதிய ஆட்சி மாற்றம் ஏற்பட்டு முதலமைச்சர் ஜோசப் விஜய் பொறுப்பேற்று 40 நாட்கள் கடந்துள்ள நிலையில், தற்போதைய த.வெ.க அரசின் நிர்வாகத் திறன் மற்றும் சட்டம்-ஒழுங்கு பராமரிப்பு குறித்துப் பிரபல நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் மகள் மதிவதனி ஒரு நேர்காணலில் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
முதல்வர் விஜய் பதவிக்கு வந்த பிறகு தொடர்ந்து சினிமா பிரபலங்களைச் சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொள்வதிலேயே கவனம் செலுத்துகிறார். மக்கள் அன்றாடம் சந்திக்கும் நடுத்தரப் பிரச்சினைகளையும், துயரங்களையும் கவனிக்கத் தவறுவது ஏன்?
‘அந்த’ இடத்தில் டார்ச்சர்?.. ஆவேசமடைந்த வி.ஜே.வைஷூ மற்றும் சூர்யா தேவி..!
இந்த 40 நாள் ஆட்சியில் குற்றங்கள் அதிகமாகி உள்ளன. கடந்த இரண்டு மாதங்களில் தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள் இரட்டிப்பாகி உள்ளன. ஒரே நாளில் 12 கொலைகள் நடப்பதாகக் கேட்கும் போது பயமாக இருக்கிறது. பெண்களுக்கு இந்த ஆட்சியில் பாதுகாப்பு இல்லை. தேர்தல் சமயத்தில் விஜய்யை நம்பிப் பெருமளவில் வாக்களித்த பெண்களுக்கு அவர் என்ன பதில் சொல்லப் போகிறார்?
ஆட்சிக்கு வருவதற்கு முன்பு “சட்டம்-ஒழுங்கைச் சீரமைப்பேன், உங்களுக்காக இருப்பேன்” எனப் பெரிய வாக்குறுதிகளுடன் வந்த முதலமைச்சர் விஜய், தற்போது சட்டம்-ஒழுங்கு விவகாரத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஒரு பெண்ணாகவும், தமிழ்நாட்டின் பிரஜையாகவும் தான் இந்த கேள்விகளை எழுப்புவதாகவும், இதற்குப் பதில் சொல்ல வேண்டிய கடமை முதலமைச்சருக்கு இருக்கிறது என்றும் மதிவதனி தனது ஆதங்கத்தைப் பதிவு செய்துள்ளார். இவரின் இந்த அதிரடிப் பேட்டி தற்போது அரசியல் களத்தில் வைரலாகி வருகிறது.

