சின்னத்திரை காமெடி நடிகர் நாஞ்சில் விஜயனுக்கும், திருநங்கை வி.ஜே.வைஷூவுக்கும் இடையே பணப் பிரச்சினை மற்றும் தனிப்பட்ட மோதல்கள் நீடித்து வரும் நிலையில், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் வைஷூ இன்று மீண்டும் ஒரு புதிய புகாரை அளித்துவிட்டு செய்தியாளர்களைச் சந்தித்தார். நாஞ்சில் விஜயன் என்னிடம் வாங்கிய ₹3 லட்சம் பணத்தைத் திருப்பித் தராமல் ஏமாற்றிவிட்டார்.
இதேபோல சூர்யா தேவி என்ற பெண்ணிடமும் பணத்தை வாங்கி ஏமாற்றியுள்ளார். என்னையும் சூர்யா தேவியையும் “கஞ்சா வியாபாரிகள்” என்று நாஞ்சில் விஜயன் அவதூறாகப் பேசியுள்ளார். கஷ்டப்பட்டு உழைத்துச் சம்பாதிக்கும் எனக்கு இந்த அவப்பெயரை ஏற்படுத்தியதற்காக அவர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.
என்னை மிகவும் தரக்குறைவாகவும், ஆபாசமாகவும் நாஞ்சில் விஜயன் பேசியதற்கான அனைத்து ஆடியோ ஆதாரங்களும் என்னிடம் உள்ளன. நான் நடிக்கும் வாய்ப்பு தேடிச் செல்லும் இடங்களுக்குச் சென்று, என்னை வாசலிலேயே துரத்திவிடும் அளவுக்குச் செய்வதாக மிரட்டுகிறார். மேலும், ஆட்களை வைத்து என் வீட்டிற்கே வந்து இந்த ஏரியாவில் இருக்க விடமாட்டேன் என்றும் மிரட்டுகிறார்.
இந்த முறை நாஞ்சில் விஜயனை சும்மா விடப்போவதில்லை என்றும், அவர் தன் செயலுக்கு மன்னிப்பு கேட்பதோடு, வாங்கிய ₹3 லட்சம் பணத்தையும் திருப்பித் தர வேண்டும் என்பதற்காகவே சட்டப்படியாக மீண்டும் புகார் அளித்துள்ளதாக வைஷூ ஆவேசமாகத் தெரிவித்துள்ளார். மேலும், வாய்ப்பு தேடும் இடத்தில் டார்ச்சர்? கொடுப்பதாகவும், நாஞ்சில் விஜயனுக்கு எதிராக ஆவேசமடைந்த வி.ஜே.வைஷூ மற்றும் சூர்யா தேவியின் செயல் தற்போது வைரலாகி வருகிறது.

