சென்னை மாநகராட்சியின் மத்திய வட்டாரத்திற்குட்பட்ட பகுதிகளில் பொது இடங்களில் அனுமதியின்றி குப்பை மற்றும் கட்டிடக் கழிவுகளைக் கொட்டுபவர்கள் மீது மாநகராட்சி நிர்வாகம் கடுமையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன்படி, ஜூன் 17 அன்று ஒரே நாளில் மட்டும் விதிகளை மீறிய 179 நபர்களுக்கு மொத்தம் ரூ.4.59 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
திரு.வி.க.நகர், அம்பத்தூர், அண்ணாநகர், தேனாம்பேட்டை மற்றும் கோடம்பாக்கம் ஆகிய மண்டலங்களில் இந்த சோதனைகள் நடத்தப்பட்டன. பொது இடங்களில் குப்பை கொட்டுதல், சுவரொட்டி ஒட்டுதல், குப்பைகளை தரம் பிரித்து வழங்காமை, இறைச்சிக் கழிவுகளை முறையாக அகற்றாமை மற்றும் கட்டிடக் கழிவுகளைக் கொட்டுதல் போன்ற விதிமீறல்களுக்காக இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஆளுநர் உரையா?.. ரீல்ஸ் கன்டென்டா?.. உதயநிதி ஸ்டாலின் சரமாரி விமர்சனம்..!
மத்திய வட்டாரத்தில் மட்டும் கடந்த ஒரு மாத காலத்தில் (ஜூன் 16 வரை) இத்தகைய விதிமீறல்களுக்காக மொத்தம் ரூ.59.92 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே, பொதுமக்கள் உரிய வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி மாநகராட்சிக்கு ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

