தமிழக சட்டப்பேரவையின் புதிய கூட்டத்தொடரில், ஆளுநர் ஆர்.வி.ஆர்லேகர் ஆற்றிய உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.எல்.ஏ-க்கள் பேரவைக்கு வெளியே கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆளுநர் உரைக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த உதயநிதி ஸ்டாலின், “ஆளுநர் உரை என்பது அரசின் எதிர்காலக் கொள்கைக்கான வழிகாட்டி ஆவணமாக இருக்க வேண்டும். ஆனால், தற்போதைய ஆளுநர் உரை வெறும் சுயவிளம்பரம் போலவும், இன்ஸ்டாகிராம் ரீல்ஸுக்கான கன்டென்ட் போலவும் சுருக்கப்பட்டுவிட்டது” என்று விமர்சித்துள்ளார்.
பெண் குழந்தைகள் பாதுகாப்பதே அரசின் முதல் லட்சியம்.. 3 நாட்கள் மட்டுமே தமிழக சட்டப்பேரவை..!
தமிழகத்தின் உண்மையான வளர்ச்சிக்கான ஆக்கப்பூர்வமான திட்டங்கள் எதுவும் இந்த உரையில் இடம்பெறவில்லை என்றும், சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு போன்ற தற்போதைய முக்கியப் பிரச்சினைகளை மூடிமறைக்கவே இது பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

