புதிய தமிழக அரசின் முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்று ஆளுநர் ஆர்.வி.ஆர்லேகர் உரையுடன் முறைப்படி தொடங்கியது. ஆளுநர் தனது உரையில், தமிழகத்தில் இருமொழிக் கொள்கையே தொடரும் என்றும், பெண் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்குவதே அரசின் முதல் லட்சியம் என்றும் குறிப்பிட்டார்.
ஆளுநர் உரை முடிந்ததைத் தொடர்ந்து, சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில், சட்டப்பேரவை கூட்டத்தொடரை மொத்தம் 3 நாட்கள் மட்டும் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.
பிறக்கும் குழந்தைக்கும் ₹1.28 லட்சம் கடன்.. உயர்ந்த தமிழகத்தின் மொத்த கடன் சுமை..!
இதன்படி, ஜூன் 19 மற்றும் 20 ஆகிய தேதிகள் விடுமுறை நாட்களாகும். அதன்பின்னர் ஜூன் 22 மற்றும் ஜூன் 23 ஆகிய தேதிகளில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதங்கள் நடைபெற்று, இக்கூட்டத்தொடர் நிறைவடையும் என சபாநாயகர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

