குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிப் புகழ்பெற்ற மாஸ்டர் மகேந்திரன், சமீபத்தில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றில் மின்வெட்டு குறித்துப் பேசி சர்ச்சையில் சிக்கியிருந்தார். அதைத் தொடர்ந்து, தற்போது ஆரம்பகாலத்தில் நடிகர் விஜய் குறித்து அவர் பேசிய ஒரு நேர்காணல் சமூக வலைத்தளங்களில் மீண்டும் வெளியாகி வைரலாகி வருகிறது.
ஆரம்பகாலத்தில் தனது தந்தையிடம் பேசும்போது, “விஜய்யா? விஜய்-ன்னா யாரு டாடி அது?” என்று மகேந்திரன் கேட்டுள்ளார். அதற்கு அவரின் தந்தை, “டேய், நீ அவரோட ‘கோயமுத்தூர் மாப்பிள்ளை’ படத்துல நடிச்சிருக்கடா” என்று நினைவூட்டியுள்ளார்.
போட்டோ எடுக்குறதுதான் வேலையா?.. வெளுத்து வாங்கிய மதிவதனி..!
அதன் பிறகே, “ஓ… அவரா!” என்று மகேந்திரன் புரிந்து கொண்டுள்ளார். மேலும், அந்தப் படப்பிடிப்பின் போது விஜய்யுடன் கிட்டத்தட்ட 45 நாட்கள் செலவிட்டதாகவும், அந்த நாட்கள் மிகவும் ஜாலியாகவும் மகிழ்ச்சியாகவும் அமைந்தன என்றும் மகேந்திரன் பகிர்ந்துள்ளார்.
மகேந்திரன் அந்தப் படத்தில் நடிப்பதற்கு முன்பே விஜய்யின் ‘பூவே உனக்காக’, ‘காதலுக்கு மரியாதை’ போன்ற படங்கள் வெளியாகிப் பெரிய ஹிட்டடித்திருந்தன. அப்படி இருக்கும்போது மாஸ்டர் மகேந்திரனுக்கு மட்டும் எப்படி விஜய்யைத் தெரியாமல் போனது என நெட்டிசன்கள் ஆச்சரியத்துடன் கமெண்ட் செய்து, இந்த வீடியோவைப் பகிர்ந்து வருகின்றனர்.

