அ.தி.மு.க முன்னாள் அமைச்சரும், தற்போதைய எம்.எல்.ஏ-வுமான செல்லூர் ராஜு, தான் தமிழக வெற்றிக் கழகத்தில் (த.வெ.க) இணையப் போவதாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இன்று விளக்கமளித்துள்ளார்.
நான் த.வெ.க-வில் இணையப் போவதாக பரவும் செய்திகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை, அவை வெறும் வதந்திகள் மட்டுமே. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் இதயதெய்வம் அம்மா (ஜெயலலிதா) ஆகியோரால் உருவாக்கப்பட்ட அ.தி.மு.க-வில் நான் நீண்டகாலமாக விசுவாசமிக்க தொண்டனாக இருந்து வருகிறேன்.
ஐந்து ஆண்டுகால சீர்கேடுதான்.. அண்ணாமலை கொடுத்த முக்கிய ஐடியா..!
என் உயிர் உள்ளவரை அ.தி.மு.க-வில் தான் நீடிப்பேன். கட்சி மாற வேண்டிய எந்தவொரு அவசியமும் எனக்கு இல்லை. சட்டசபையில் முதல்வர் விஜய் கொண்டு வந்த மேகதாது அணை தீர்மானத்திற்கு அ.தி.மு.க ஆதரவு அளித்தது அரசியல் நாகரிகத்தின் அடிப்படையிலானது மட்டுமே, அதைத் தவறாகப் புரிந்து கொள்ளக் கூடாது என தெரிவித்து இருந்தார்.
ஏப்பா, ஏய்! எத்தனை கட்சியிலப்பா சேர்ப்பீங்க. நான் என்றும் புரட்சித்தலைவர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில் தான். புரட்சித் தலைவர் ஏழைகளின் நன்மைக்காக உருவாக்கிய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தான் என் வழி. pic.twitter.com/Tr5EXXVzyK
— Sellur K Raju (@SellurKRajuoffl) June 19, 2026

