Author: Prime Reporter
கர்நாடகாவில் உள்ள பிரபல ஐயப்பன் சுவாமி கோவில்கள், வழிபாட்டு நேரங்கள் மற்றும் சிறப்பு திருவிழாக்கள் பற்றிய முழு தகவல்கள் இங்கே.
காரம் நிறைந்த சில்லி எக் போண்டா ரெசிபி வைரல்; வீட்டிலேயே எளிதாக செய்யும் முறையும் சுவை ரகசியமும் அறிந்துகொள்ளுங்கள்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதிய 2 மணி நேரத்தில் திமுகவில் இணைந்துள்ளார் முன்னாள் அமைச்சர். அதிமுகவில் இருந்து விலகுவதாக முன்னாள் அமைச்சர் நிலோபர் கபில் கட்சி தலைமைக்கு கடிதம் எழுதியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியது. இதனிடையே அவர் திமுகவில் இணைவார் என்ற பேச்சும் கிளம்பியது. அதன்படி, எடப்பாடி பழனிசாமிக்கு எழுதியுள்ள விலகல் கடிதத்தில், தான் நீண்ட காலமாக கழகத்தில் பயணித்து வந்ததாகவும், தற்போது சொந்த சூழ்நிலை காரணமாக கழக பணிகளில் ஈடுபட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து தான் விலகுவதாகவும், தனது ராஜினாமா மற்றும் விலகல் கடிதத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவித்திருந்தார். விலகல் கடிதம் கொடுத்ததும், இன்று திருப்பத்தூர் மாவட்டத்தில் நடந்த திமுக மாநாட்டில் பங்கேற்ற நிலோபர் கபில், முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் கட்சியில் இணைந்தார்.
தயிருடன் சில உணவுகளை சேர்த்து சாப்பிடுவது செரிமான பிரச்சனைகள் மற்றும் உடல் நல பாதிப்புகளை ஏற்படுத்தலாம் என்பதால் கவனம் அவசியம்.
இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமை கொண்ட சசிக்குமார், சமீப காலமாக நல்ல கதையை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அயோத்தி, கருடன், நந்தன், டூரிஸ்ட் ஃபேமிலி போன்ற படங்கள் பெரும் வெற்றி பெற்றன. அந்த வகையில் மை லார்ட் படம் நேற்று வெளியானது. படம் வெளியாவதற்கு முன்னரே பாசிட்டிவ் ரிசல்ட் வெளியாகியிருந்தது. ராஜூமுருகன் இயக்க, சைத்ரா கதாநாயகியாக நடித்திருந்தார். ஷான் ரோல்டன் இசையமைத்த இந்த படம் பெரும் எதிபார்ப்புக்கு இடையில் வெளியானது. படம் எதிர்பார்த்தபடி வரவேற்பை பெற்று வருவதால், படத்தின் விநியோகஸ்தரான சூர்யா, படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். #Suriya met #MyLord Team & appreciated for their work 👏♥️pic.twitter.com/FsNLRHWzhq— AmuthaBharathi (@CinemaWithAB) February 14, 2026 வெற்றிக்க வித்திட்ட படக்குழுவினரை சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநருக்கு வாழ்த்து தெரிவித்து பாராட்டிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இறால் நெய் ரோஸ்ட் காரமான சுவையுடன் வீட்டிலேயே எளிதாக செய்யக்கூடிய சுவையான கடல் உணவு ரெசிபி ஆகும்.
சேலத்தில் நடந்த தவெக கூட்டத்தில் பேசிய விஜய், அண்ணா வைத்திருந்த திமுகவை முதலமைச்சர் ஸ்டாலின் வைத்துள்ளார். அதிமுகவை எடப்பாடி பழனிசாமி வைத்துள்ளார் என விமர்சித்தார். இது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த நயினார் நாகேந்திரன், முதலில் விஜய் வெளியே வர வேண்டும், நடிகையின் வீட்டை விட்டு வந்து பேச வேண்டும் என கூறினார். இதற்கு ஒட்டுமொத்த அரசியல் கட்சியினரும் நயினார் நாகேந்திரன் கண்ணியத்தை தவறவிட்டுள்ளார் என கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், தவெக கொள்ளை பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத் கடும் விமர்னங்களை முன் வைத்துள்ளார். அவர் கூறியதாவது, ஒரு தேசியக் கட்சியின் மாநிலத் தலைவராக இருக்கும் ஒருவர், எத்தகைய அரசியல் கண்ணியத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற அடிப்படை அறிவைக்கூட நயினார் நாகேந்திரன் இழந்துவிட்டார். எங்கள் கிளைச் செயலாளர் கூட இவரை விடக் கண்ணியத்தோடு பேசுவார். அறிவாலயத்தைத் திட்டினால் கமலாலயத்தில் உள்ள ஒருவருக்குக் காய்ச்சல் வருகிறதா? அறிவாலயமும்…
சிவன் அருளைப் பெற மகாசிவராத்திரி நாளில் பக்தர்கள் விரதம் இருந்து பூஜைகள் செய்து சிறப்பு வழிபாடு நடத்துகின்றனர் பக்தி உற்சாகம் அதிகரிக்கிறது.
சரும அழகையும் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துவதில் கடல் உப்பு ஒரு புதையல் ஆகும். கடல் நீரின் ஆவியாதலில் இருந்து பெறப்படும் கடல் உப்பு, அதன் கனிம உள்ளடக்கம் காரணமாக, பல்வேறு அழகு நன்மைகளுக்காக பல நூற்றாண்டுகளாகப் பயன்படுத்தப்படுகிறது. கடல் உப்பு சருமத்திற்கு நன்மை கொடுக்கும் பண்புகளுக்காக பல ஆண்டுகளாக பெரிதும் பயன்படுத்தப்கிறது. கடல் உப்பு தோல் பராமரிப்பு மற்றும் முடி பராமரிப்புக்கு பல நன்மைகளை வழங்கக்கூடும் என்றாலும், அதை சரியாக பயன்படுத்தாவிடில், பக்க விளைவுகள் ஏற்படக்கூடும். உங்கள் சருமம் முதல் முடி வரை, உங்கள் அனைத்து அழகுத் தேவைகளுக்கும் கடல் உப்பு சிறந்த தோல் பராமரிப்பாக இருக்கிறது. கடல் உப்பின் அழகு நன்மைகள் இயற்கை எக்ஸ்ஃபோலியண்ட் கடல் உப்பு ஒரு ஈர்க்கக்கூடிய இயற்கை எக்ஸ்ஃபோலியண்ட் ஆகும். கடல் உப்பு இறந்த சரும செல்களை அகற்றி, சருமத்தை மென்மையாகவும், பளபளப்பாகவும் மாற்றுவதற்கு சரியான எக்ஸ்ஃபோலியண்டாக அமைகிறது. கடல் உப்பு முகப்பரு வடுக்களின் தோற்றத்தையும் குறைக்கும்.…
4 பேருக்கு மறுவாழ்வு கொடுத்து ஒவ்வொருவர் மனதிலும் மனிதநேயத்தை விதைத்து சென்றுளார் 10 மாத பெண் குழந்தை அலின் ஷெரின் ஆபிரகாம். கேரளாவில் 10 மாத பெண் குழந்தை துயராமான சாலை விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்தது. பத்தினம் திட்டா மாவட்டத்தில் உள்ள பல்லம் போர்மா சந்திப்பில், எதிரே வந்த கார் அலின் ஷெரின் பெற்றோர்கள் பயணித்த வாகனத்தின் மீது மோதியதில் இந்த துயர சம்பவம் நடந்துள்ளது. குழந்தைக்கு உடனே சிகிச்சை அளிக்க அருகில் மருத்துவமனைக்கு கொண்டு சென்று பின்னர் கொச்சிக்கு மாற்றப்பட்டனர். ஆனால் நேற்று குழந்தை மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர். இதையடுத்து 10 மாத குழந்தையின் தந்தை அருண் ஆபிரகாம் மற்றும் தாய் ஷெரின் ஆன் ஜான், குழந்தையின் உறுப்புகளை தானம் செய்ய முடிவு செய்தனர். அதன்படி உள்துறை ஆதரவுடன், கேரள உறுப்பு பகிர்வு வலையைமப்பு ஒருங்கிணைப்பின் கீழ், திருவனந்தபுரத்தில் உள்ள பல்வேறு மருத்துவ மையங்களுக்கு உறுப்புகள் கொண்டு…
