தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும் இன்று வாக்கு எண்ணிக்கை என்னப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 8 மணி முதலாக வாக்குப்பதிவு தொடங்குகிறது. முதலில் தபால் வாக்குகள் எனப்படும் நிலையில் 8:30 மணிக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் என்னப்பட உள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள 234 வாக்கு என்னும் மையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருக்கிறது. துப்பாக்கி ஏந்திய துணை ராணுவ படையினர் மற்றும் மாநில காவல்துறையினர் என மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை பணிக்காக தேர்தல் ஆணையம் பல்வேறு ஏற்பாடுகளை செய்திருக்கிறது.
இளையராஜா போட்ட ஒரே ஒரு போஸ்ட்.. கலைஞர் சொன்னதை வைத்து விமர்சிக்கும் திமுகவினர்..!
வாக்கு மையத்தில், ஒவ்வொரு மேஜையிலும் ஒரு மேற்பார்வையாளர் ஒரு உதவியாளர் மற்றும் ஒரு பார்வையாளர் நியமிக்கப்பட்டுள்ளனர். வாக்கு எண்ணிக்கை மையங்களில் வேட்பாளர்கள் அவர்களின் அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் வருகை தந்திருக்கின்றனர். செல்போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அதிகாலை 4 மணி முதலே பனையூரில் உள்ள நடிகர் விஜயின் ரசிகர்கள் அவரது வீட்டின் முன்பாக குவிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

