விஜயகுமாரின் மகள்களில் ஒருவரான வனிதா தொண்ணூறுகளின் சினிமாவில் ஹீரோயினாக நடித்தவர். இவர் குறிப்பாக, விஜய்க்கு ஜோடியாக நடித்த சந்திரலேகா படத்தில் பிரபலமானார். பிறகு திருமணம் ஆகி செட்டிலான அவர் திருமண வாழ்க்கை நல்லபடியாக அமையவில்லை என்பதால், அதில் இருந்து வெளியே வந்து சில திருமணங்களை செய்து கொண்டார்.

அதுவும், அவருக்கு சரியாக அமையவில்லை. தற்போது, சிங்கிளாக இருந்து வருகிறார். இந்நிலையில், இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. தனியார் youtube சேனலுக்கு வனிதா விஜயகுமார் கொடுத்த பேட்டியில், ஒரு பர்சனாக எனக்கு என்னை ரொம்ப பிடிக்கும்.

நள்ளிரவு கிளைமேக்ஸ் ட்விஸ்ட்.. ஆம்புலன்ஸ் அலப்பறை டூ 108 தொகுதிகள் வெற்றி..!
நல்ல ஒரு நண்பனாகவும் இருப்பேன். என்னை பர்சனல் ஆக உங்களுக்கு தெரியும் என்றால், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும் என்று தான் சொல்வேன். அம்மா என்பது ஒரு பொறுப்பு. எல்லா குழந்தைகளுக்கும் அம்மாவை பிடிக்கும். எல்லா அம்மாக்களுக்கும் குழந்தைகளை பிடிக்கும்.

அது ஒரு விதி முறை அதுதானே இயற்கை. அதேசமயம், என் பிள்ளைகளுக்கு என்னை பிடிக்கும் என்பதற்காக நான் நல்லவன் இல்லை. எனக்கு என் பிள்ளைகள் பிடிக்கும் என்பதற்காக அவர்களும் நல்லவர்கள் இல்லை என்று குறிப்பிட்டிருந்தார். அவரது இந்த பேட்டியை பார்த்த ரசிகர்கள் தற்போது கமெண்ட்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

