தேவையான பொருட்கள்
- 2 1/2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
- 1 டீஸ்பூன் கடுகு
- 1 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு
- 3/4 டீஸ்பூன் சீரகம்
- 1 1/4 டீஸ்பூன் கடலைப் பருப்பு
- முந்திரி – 6 (உடைத்தது)
- 1 கொத்து கறிவேப்பிலை
- 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி (பொடியாக நறுக்கியது)
- பச்சை மிளகாய் – 3 (நறுக்கியது)
- பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
- ரவை – 1 கப்
- மஞ்சள் தூள் – 2 சிட்டிகை
- கேரட், பீன்ஸ், பச்சை பட்டாணி – தேவையான அளவு (வேக வைத்தது)
- தக்காளி – 1 (நறுக்கியது)
- உப்பு – சுவைக்கேற்ப
- எண்ணெய் – 1 1/2 டேபிள் ஸ்பூன்
- துருவிய தேங்காய் – 1/4 கப்
- நெய் – 1 1/2 டீஸ்பூன்
- கொத்தமல்லி – சிறிது
செய்முறை
Step 1: ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் மூன்று கப் நீரை ஊற்றி சூடாக்க வேண்டும். பின்னர், உப்புமாவுக்கு தேவையான அளவு கேரட், பீன்ஸ், பட்டாணி ஆகியவற்ற ஒரு பாத்திரத்தில் போட்டு சிறிது நீர் ஊற்றி காய்கறிகளை வேக வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
ஞாபக சக்தியை இரட்டிப்பாக்கணுமா?.. மணக்க மணக்க வல்லாரைக் கீரை சட்னி..!
Step 2: அதன் பின்னர், வானொலியை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், கடலைப்பருப்பு, கருவேப்பிலை மற்றும் உடைத்த முந்திரியை சேர்த்து நன்று நன்கு வருக்க வேண்டும். பின்னர் பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.
Step 3: பிறகு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வதக்க வேண்டும். அடுத்து, அதில் ஒரு கப் ரவையை சேர்த்து நன்கு வருக்க வேண்டும். அடுத்து அதில், மற்றொரு அடுப்பில் கொதித்துக் கொண்டிருக்கும் சூடு நீரை ஊற்றி நன்கு கிளற வேண்டும்.
Step 4: பின்னர், அதில் மஞ்சள் தூள் வேகவைத்த காய்கறிகள் நறுக்கிய தக்காளி சுவைக்கு ஏற்ப உப்பு சேர்த்து நன்றாக கிளற வேண்டும். அரை டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி மூடி வைத்து ஐந்து நிமிடம் குறைவான தீயில் வைத்து வேக வைக்க வேண்டும். ஐந்து நிமிடம் கழித்து மூடியை திறந்து அதில், துருவிய கேரட் ஒன்றே டீஸ்பூன் நெய் மற்றும் சிறிதளவு கொத்து மல்லிகை தூவி இறக்கினால் சுவையான ரவா கிச்சடி தயார்.

