உங்கள் வீட்டில் தக்காளி மற்றும் குடைமிளகாய் இருக்கா? அப்படி இருந்தால் சூப்பரான குடைமிளகாய் சட்னியை செய்து பாருங்கள். இதை நீங்கள் வழக்கமான தக்காளி சட்னி விட ருசியாக இருக்கும். அது மட்டும் இல்லாமல் சுவையும் கூடுதலாக இருக்கும். இந்த குடைமிளகாய் தக்காளி கார சட்னி கர்நாடகாவில் மிகவும் பிரபலமானதாகும். இந்த சட்னி சுவையானதாக இருப்பதோடு இதை செய்வதும் மிகவும் எளிதானது.
தேவையான பொருட்கள்
- எண்ணெய் ஒரு டீஸ்பூன்
- உளுத்தம்பருப்பு ஒரு டீஸ்பூன்
- கடலைப்பருப்பு ஒரு டீஸ்பூன்
- காஷ்மீரி மிளகாய் 4
- நறுக்கிய பூண்டு பற்கள் இரண்டு
- பொடியாக நறுக்கிய வெங்காயம் அரை
- ஒரு தக்காளி பொடியாக நறுக்கியது
- ஒரு குடைமிளகாய்
- உப்பு தேவையான அளவு
- தண்ணீர் தேவையான அளவு
தாளிக்க,
- அரை டீஸ்பூன் எண்ணெய்
- அரை டீஸ்பூன் கடுகு
- அரை டீஸ்பூன் உளுத்தம்பருப்பு
- ஒரு சிட்டிகை பெருங்காயம்
- சிறிது கருவேப்பிலை
செய்முறை
நாவூறும் சுவையில் ‘ரோசாப்பூ சட்னி’.. இட்லி, தோசைக்கு இனி இதுதான் பெஸ்ட் சைடு டிஷ்..!
Step 1: ஒரு வானொலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும். அதில், உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, வரமிளகாய் பொன்னிறமாகும் வரை வறுக்கவும். பின்னர் நறுக்கிய பூண்டை சேர்க்கவும். பூண்டின் பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்கிக் கொள்ளவும்.
Step 2: பின்னர் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து அது கண்ணாடி பதம் வரும் வரை வதக்கி அதனுடன் தக்காளியை சேர்த்து அவை மென்மையாகும் வரை நன்கு வேக வைக்கவும். இறுதியாக குடைமிளகாய் சேர்த்து அது சுருங்கும் வரை வதக்கி குடைமிளகாய் வேக அதிக நேரம் எடுக்காது.
Step 3: எனவே இந்த கலவை ஆறியவுடன் அவற்றை மிக்ஸி ஜாரில் சேர்த்து உப்பு மற்றும் தேக்கரண்டி தண்ணீர் சேர்த்து வெண்மையான விழுதாக அரைக்கவும். சட்னியை தாளிக்க ஒரு கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி அத்துடன் கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம் அவற்றை சேர்க்கவும்.
டயட்டில் இருப்பவரா? இதோ உங்களுக்கான பஞ்சு போன்ற ராகி பூரி..!
Step 4: கடுகு வெடித்ததும் கருவேப்பிலையை சேர்த்து அந்த தாளிப்பை சட்னியின் மேல் கொட்டி கிளறவும். அவ்வளவுதான் சுவையான கர்நாடகா ஸ்பெஷல் குடைமிளகாய் சட்னி ரெடி இதை சூடான இட்லி, தோசை மற்றும் சாதத்திற்கு பரிமாறலாம்.

