காலை டிபனுக்கு டைம் இல்ல ஆனா இட்லி, தோசைக்கு சட்னி செஞ்சே ஆக வேண்டிய நிலை. இந்த மாதிரி நிலையில், ஈஸியான சட்னி வித்தியாசமான சுவையுடன் குறைந்த நேரத்தில், நீங்கள் தயார் செய்யலாம். அதற்கு, காரசாரமான கருவேப்பிலை சட்னியை செய்து பாருங்கள். இதனை உங்கள் வீட்டில் வழக்கமாக சாப்பிடுவதை விட அதிகமாக சாப்பிடுவார்கள்.
தேவையான பொருட்கள்
- கறிவேப்பிலை 50 கிராம்
- புளி 20 கிராம்
- பச்சை மிளகாய் 100 கிராம்
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் 5 ஸ்பூன்
- கடுகு 1 ஸ்பூன்
- வெந்தயம் 1/4 ஸ்பூன்
- சீரகம் 1 ஸ்பூன்
- உளுத்தம்பருப்பு 1 டேபிள் ஸ்பூன்
- கடலைப்பருப்பு 1 டேபிள் ஸ்பூன்
- தனியா 2 ஸ்பூன்
- 10 பூண்டு பல்
- மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன்
செய்முறை
Step 1: ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி கடுகு, வெந்தயம், சேர்த்து வெந்தயம் பொன்னிறமாகும் வரையும் வறுக்கவும். புளியை கரைத்து ஒரு கப் புளிக்கரைசல் எடுத்துக் கொள்ளவும்.

Step 2: பின் கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு சேர்த்து அதன் நிறம் மாறும்வரை வறுத்து வெந்தயத்தை சேர்க்கவும். இதில், பூண்டு மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து பச்சை மிளகாயை எண்ணெயில் நன்றாக வதக்கவும்.
Step 3: பச்சை மிளகாய் நன்கு வெந்ததும் கழுவி உலர்த்திய கருவேப்பிலையை சேர்த்து இலைகளில் உள்ள ஈரம் பற்றும் வரை மிதமான தீயில் வறுக்கவும். இந்த கலவை நன்கு ஆறியதும் இவற்றை ஒரு மிக்சர் ஜாரில் சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் சற்று கெரகெரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும். கருவேப்பிலை வறுத்த அதே எண்ணெயில் புளிக்கரைசலையும் வெள்ளத்தையும் சேர்த்து கெட்டியான கூழ் பதத்திற்கு வரும் வரை கொதிக்க வைக்க வேண்டும்.
Step 4: கெட்டியான புளிக்கரைசலில் உப்பு மஞ்சள் தூள் மற்றும் அரைத்து வைத்துள்ள கருவேப்பிலை சட்னியை சேர்த்து இரண்டு நிமிடம் கொதிக்க வைத்து அடுப்பை அணைத்துவிட்டு நன்றாக கலக்கவும்.
Step 5: இதை ஆறவிடவும், இந்த சட்னியை ஒரு கண்ணாடி பாட்டிலில் சேமித்து வைத்தால் குளிர்சாதன பெட்டியில் வைத்து குறைந்தது. ஒரு மாதம் வரையில் பயன்படுத்தலாம். வெளியே வைக்கும் போது 20 நாட்கள் வரையிலும் கெடாமல் இருக்கும். இது இட்லி தோசைக்கு மட்டுமின்றி சாதத்தில் பிசைந்து சாப்பிட அருமையாக இருக்கும்.

