Browsing: கோவை
சிறுமுகை வனச்சரகத்தில் தாயைப் பிரிந்த குட்டி யானையை மீண்டும் கூட்டத்துடன் சேர்க்கும் பணி 4-வது நாளாக நீடிக்கிறது; வனத்துறையினர் ட்ரோன் மூலம் தீவிர தேடுதல்.
தங்கை மற்றும் அவரது கணவர் சேர்ந்து தனது பெட்ரோல் பங்கை அபகரிக்க முயற்சிப்பதாகக் கூறி, கோவை மாவட்ட ஆட்சியரிடம் அண்ணன் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
கோவை சிஎஸ்ஐ பேராயர் பிரின்ஸ் கால்வின், தனது மனைவி மற்றும் 175 சவரன் நகையை அபகரித்ததாக ஆயுள் தண்டனை கைதி தொடர்ந்த வழக்கு நீதிமன்ற விசாரணைக்கு வந்தது.
சிறுமுகை வனச்சரகத்தில் தாயைப் பிரிந்த குட்டி யானையை மீண்டும் கூட்டத்துடன் சேர்க்க வனத்துறை எடுத்த 72 மணி நேரப் போராட்டம் தோல்வியில் முடிந்தது; குட்டி பாதுகாப்பாக மீட்பு.
இஸ்ரேலில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி கோடிக்கணக்கில் மோசடி செய்த ‘ராயல் டெஸ்டிங் சென்டர்’ நிறுவன உரிமையாளர் தலைமறைவு; கோவையில் பாதிக்கப்பட்டவர்கள் காவல் ஆணையரிடம் புகார்.
கோவை பேரூர் அருகே ஹயாஷி-ஹா கராத்தே பெடரேஷன் சார்பில் நடைபெற்ற பட்டயத் தேர்வில், 210-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியருக்கு அவர்களின் திறமைக்கேற்ப வண்ணப் பட்டயங்கள் மற்றும் கேடயங்கள் வழங்கப்பட்டன.
சென்னையில் சர் பி.டி. தியாகராயர் சிலைக்கு மரியாதை செலுத்திய திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, மே 4-ஆம் தேதி மீண்டும் திராவிட மாடல் ஆட்சி அமையும் என நம்பிக்கை தெரிவித்தார்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் ஒரு சடங்கு போல நடைபெற்றதாகவும், பணப்பட்டுவாடாவைத் தடுக்கத் தவறிய தேர்தல் ஆணையத்தை மறுசீரமைக்க வேண்டும் என்றும் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி கோவையில் வலியுறுத்தினார்.
கோவை செட்டிபாளையம் அருகே கிரிக்கெட் மைதானத்தில் திடீரென உருவான சுழல் காற்றால் விளையாட்டு உபகரணங்கள் காற்றில் பறந்த வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் நடைபெற்ற இதயங்கள் அறக்கட்டளையின் 9-வது ஆண்டு விழாவில், டைப் 1 சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட 4000 குழந்தைகளுக்கு வழங்கப்படும் மருத்துவச் சேவைகள் மற்றும் புதிய திட்டங்கள் குறித்து விளக்கப்பட்டது.
