Author: Prime Reporter

தமிழகத்தில் எங்கு திரும்பினாலும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. குறிப்பாக பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான சம்பவங்களே நடந்து வருவது மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆளும் திமுக அரசை, எதிர்க்கட்சிகள் வசைபாடி வருகின்றனர். இந்த சூழலில் திமுகவில் உள்ள கூட்டணி கட்சியான மநீம கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து மநீம தலைவரும், எம்பியுமான கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சாந்தமா, கோபப்படாம இருந்துட்டா நதி சுத்தமாயிடுமா? நல்லவங்கள்ளாம் கோபப்படாம இருக்கறதுனாலதான் இந்த மாதிரி சாக்கடையே ஓடுது… இந்த மாதிரி சாக்கடையா வச்சிருக்கறதுனாலதான்… அவனவன் நானும் கொஞ்சம் ஒண்ணுக்கடிச்சா என்ன கெட்டுரும்… காறி துப்பினா என்ன கெட்டுரும்னு செஞ்சிக்கிட்டே இருக்கான்” சமூக இழிவுகளைக் கண்டு மனம் வெதும்பி 32 ஆண்டுகளுக்கு முன்பு நான் மகாநதியில் வெளிப்படுத்திய கருத்து இது. இன்னும் நிலைமை மாறவில்லை. அந்தக் கோபம் என்னுள் தீரவில்லை. பெண்களை, குழந்தைகளை பாதுகாக்க முடியாத சமூகத்தை நாகரீக சமுதாயமாக கருதவே முடியாது. அவர்கள் அச்சுறுத்தப்படும் சூழலில்…

Read More

தமிழகத்தில் நடந்துள்ள குற்றச்சம்பவங்கள் குறித்து உள்துறை செயலர் மற்றும் டிஜிபி வெங்கட்ராமன் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். குறிப்பாக கடந்த ஆண்டுகளை பொறுத்தவதை குற்றச்சம்பவங்கள் குறைந்துள்ளதாகவும், அதிமுக ஆட்சியில் 1597 குற்றச்சம்பவங்கள் தற்போது 461ஆக குறைந்துள்ளதாக கூறினார். இந்த ஆண்டு நடந்த குற்றச்சம்பவங்கள் பற்றி எதுவும் சொல்லாததால் இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் கடும் கண்டனங்களை குவித்து வருகின்றனர் அந்த வகையில் பாஜக மூத்த தலைவர் ஹெச் ராஜா வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், தமிழக வருவாய்துறையும், காவல்துறையும் திமுகவின் துணை அமைப்புகள் போல செயல்படுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தமிழக அரசின் உள்துறை செயலாளர் மற்றும் தமிழக காவல்துறை பொறுப்பு இயக்குனர் மற்றும் சென்னை மாநகர காவல் ஆணையர் ஆகியோரின் மழுப்பலான, உண்மைக்கு புறம்பான தகவல்களை பதிவு செய்யும் பத்திரிக்கையாளர் சந்திப்பை பார்க்கும் வருந்தத்தக்க நிலை தமிழக மக்களுக்கு ஏற்பட்டுள்ளது வேதனையளிக்கிறது. கடந்த இரண்டு மாதங்களில் தமிழகமெங்கும் 60 க்கும் மேற்பட்ட படுகொலைகள் நடந்திருப்பதும்,…

Read More

அரிசி கழுவிய நீர் சருமம், முடி மற்றும் உடல்நலத்திற்கு பல நன்மைகள் தரும் இயற்கை மருந்து என நிபுணர்கள் கூறுகின்றனர்.

Read More

சூரிய ஆற்றலை விண்வெளியில் சேகரித்து லேசர் கதிர்களால் பூமிக்கு அனுப்பும் புதிய தொழில்நுட்பம் எரிபொருளுக்கு மாற்றாக உருவாகலாம்.

Read More

பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு என்ற வதந்தியால் சென்னை பூந்தமல்லி சாலையில் பங்குகளில் நீண்ட வரிசையில் வாகன ஓட்டிகள் காத்திருக்கும் நிலை.

Read More

மெட்ராஸ் ஐ எனப்படும் கண் தொற்று எப்படி பரவுகிறது, அதன் அறிகுறிகள் என்ன, அதைத் தடுக்கும் வழிகள் என்ன என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

Read More

எண்ணெய் இல்லாமல், அடுப்பு பயன்படுத்தாமல் வீட்டிலேயே மென்மையான இட்லி மற்றும் சுவையான சட்னி செய்வது எப்படி என்று பாருங்கள்.

Read More

MGR குறித்து அவதூறாகப் பேசியதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் மற்றும் மன்னிப்பு கோரி பேச வலியுறுத்தியுள்ளார்.

Read More

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் பெருகி வரும் நிலையில் எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், விடிந்தால் ஒரு பாலியல் வன்கொடுமை செய்தி வரும் விடியா திமுக ஆட்சியில், இன்று காலையிலேயே சென்னையில் மட்டும் 14 வயது பள்ளி மாணவிக்குப் பாலியல் வன்கொடுமை, ப்ராஜெக்ட் தொடர்பாக சென்னை வந்த கல்லூரி மாணவிக்குப் பாலியல் வன்கொடுமை, தையல் கடையில் 19 வயது பெண்ணுக்குப் பாலியல் தொல்லை என மூன்று செய்திகள் வந்திருக்கின்றன. இந்தப் பதிவை எழுதும் போதே தமிழகத்தின் எந்த மூலையில், எந்தப் பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி வருகிறாரோ என யோசிக்கையில் ஈரக்குலை நடுங்குகிறது. தொடர்ந்து ஒரு வார காலமாக நடக்கும் கொடூரங்களே, கேடுகெட்ட திமுக ஆட்சியின் திறனற்ற நிர்வாகத்திற்கு சாட்சி! எனவே, தமிழகத்தைப் பெண்கள் வாழத் தகுதியற்ற மாநிலமாக மாற்றிய திமுகவைத் துரத்தியடிப்போம்! தமிழக மகளிரைக்…

Read More

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையில் தங்கியிருந்த திருச்சியைச் சேர்ந்த கல்லூரி மாணவி காரில் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை – பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்களை மறைக்க உரிமைத் தொகையாக 1, 000 ரூபாய், கோடை கால சிறப்பு உதவித் தொகையாக 2,000 ரூபாய் வழங்கி திமுக அரங்கேற்றும் நாடகங்களுக்கு, வரும் சட்டமன்றத்தேர்தலில் தமிழக பெண்கள் நடத்தப் போகும் மௌனப் புரட்சியே பதில் சொல்லும். கல்வி தொடர்பான பணிக்காக திருச்சியிலிருந்து சென்னை வந்து விடுதியில் தங்கியிருந்த கல்லூரி மாணவி ஒருவர் அடையாளம் தெரியாத கும்பலால் கடத்திச் செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்தி மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. தமிழகத்தின் தலைநகர் சென்னையில் பட்டப்பகலில் கல்லூரி மாணவி ஒருவரை வலுக்கட்டாயமாக காரில் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்யும் அளவிற்கான சூழல் உருவாகியிருப்பதை பார்க்கும் போது தமிழக காவல்துறை முற்றிலுமாக செயலிழந்துவிட்டதையே வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. கிருஷ்ணகிரியில்…

Read More