கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் போளுவாம்பட்டி மற்றும் இக்கரை போளுவாம்பட்டி போன்ற வனப்பகுதியையொட்டிய சாலைகளில் மலைப்பாம்புகள் ஊர்ந்து சென்று சாலையைக் கடப்பது வழக்கமான ஒன்றாக உள்ளது. வனப்பகுதியை ஒட்டியுள்ள இத்தகைய சாலைகளில் இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் வாகனங்களை மெதுவாகவும் கவனமாகவும் இயக்கு வேண்டும் என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று இரவு இந்த சாலையில் சுமார் 8 அடி நீளமுள்ள மலைப்பாம்பு, மெல்ல ஊர்ந்து, சாலையை கடந்து சென்றது. இதனை அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள், செல்போண் வெளிச்சம், மற்றும் இருசக்கர வாகன முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடி அதனை தங்களது செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளனர். இந்த வீடியோ காட்சிகள் தற்போது வைரலான நிலையில், இது குறித்து வனத்துறையினர் பொதுமக்களுக்கு அறிவுரைகளை வழங்கியுள்ளனர்.
காலைல 5 நிமிஷத்துல சத்தான கம்பு கூழ் செய்யலாமா? இன்ஸ்டன்ட் ரெசிபி இதோ..!
இரவு நேரங்களில் இப்பகுதியில் வாகனங்களை மெதுவாக ஓட்ட வேண்டும், சாலையைக் கடக்கும் விலங்குகளைத் தொந்தரவு செய்யாமல் இருக்க வேண்டும், குடியிருப்பு அல்லது தோட்டப் பகுதிக்குள் பாம்புகள் வந்தால் உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும், வனப்பகுதிகளில் ஊர்ந்து செல்லும் மலைப்பாம்புகளின் நடமாட்டம் இருப்பதால், வாகன ஓட்டிகள் கவனமாக வாகனங்களை இயக்க வேண்டும் என்று வனத்துறையினர் அறிவுரை வழங்கியுள்ளனர்.

