Author: Prime Reporter
திருப்பூரில் வீட்டு உபயோக சிலிண்டர்களுக்கு எவ்விதத் தட்டுப்பாடும் இல்லை என்றும், வணிக சிலிண்டர்கள் விரைவில் தடையின்றி வழங்கப்படும் என்றும் பாரத் கேஸ் விநியோகஸ்தர் சங்கம் தெரிவித்துள்ளது.
திமுகவின் வெற்று விளம்பர பிரம்மாண்ட மாநாடுகளுக்கும், தங்களது கூட்டணிக் கட்சியினர் நடத்தும் தேவையற்ற போராட்டங்களுக்கும் உடனடியாக அனுமதி வழங்கி வரும் முதலமைச்சருக்கு, தமிழக பாஜக தலைவர் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,இந்து மக்கள் கட்சி சார்பாக சென்னையில் வரும் மார்ச் 15 ஆம் தேதி ஒய்.எம்.சி.ஏ உள்ளரங்கில் தமிழ், தமிழர், தமிழகம் உரிமை மீட்பு மாநாடு நடைபெறவுள்ள நிலையில், அரசியல் உள்நோக்கத்துடன் அதற்குத் திமுக அரசு அனுமதி மறுத்து, சுவரொட்டி மற்றும் விளம்பரங்களைப் பறிமுதல் செய்துள்ளது மிகுந்த கண்டனத்திற்குரியது. தாங்கள் நடத்தும் வெற்று விளம்பர பிரம்மாண்ட மாநாடுகளுக்கும், தங்களது கூட்டணிக் கட்சியினர் நடத்தும் தேவையற்ற போராட்டங்களுக்கும் உடனடியாக அனுமதி வழங்கும் திமுக அரசு, மாற்றுக்கட்சியினர் நடத்தும் நிகழ்ச்சிகளுக்கு மட்டும் அனுமதி மறுத்து முடக்க நினைப்பது ஏன்? திமுகவின் தமிழர் விரோத முகம் மக்கள் முன்பு அம்பலப்பட்டுவிடும் என்ற பயமா? அல்லது, யார் எதிர்க்க முடியும் என்னும் அதிகாரமா?…
கோவை மாநகராட்சியில் மூன்று திட்டங்கள் திறப்பு; உக்கடம் பேருந்து நிலையம் புதிய வசதிகளுடன் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது.
இந்தியாவின வெளியுறவுக் கொள்கை குறித்த முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கடுமையாக விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை எவ்வளவு ஒரு தலைப் பட்சமாக மாறிக் கொண்டிருக்கிறது என்பதற்கு இன்னுமொரு சான்று ஐ நா சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் ஈரான் நாட்டைக் கண்டனம் செய்து கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை இந்தியா முன்மொழிந்தது ஆனால் ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் தொடர்ந்து நடத்தும் போரையும் 1300 ஈரான் மக்கள் கொல்லப்பட்டதையும் 168 குழந்தைகள் மரணித்ததையும் கண்டித்து ஒரு வார்த்தை சொல்லவில்லை ஐ நா பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா மற்றும் 12 நாடுகளின் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ரஷ்யாவும் சீனாவும் தீர்மானத்தை ஆதரித்து வாக்களிக்கவில்லை எது விவேகம்? எது ராஜதந்திரம்? எது சாய்மானம் இல்லாத வெளியுறவுக் கொள்கை? இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
விஜய்யுடன் திருமண விழாவில் பங்கேற்றது குறித்து கேள்வி எழுப்பிய செய்தியாளர்களுக்கு நடிகை த்ரிஷா பதிலளிக்காமல் மௌனமாக சென்ற வீடியோ வைரலாகிறது.
நடிகர் Ajith Kumar அவரின் கார் ரேசிங் ஆர்வத்தை பாராட்டி Mahindra & Mahindra நிறுவனம் Formula E தீம் SUV காரை பரிசளித்தது.
2005-ஆம் ஆண்டு வெளியான பிரினீதா படத்தின் மூலமாக அறிமுகமானவர் வித்யா பாலன். பா, கஹானி உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும், மறைந்த சில்க்ஸ்மிதாவின் வாழ்க்கை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட தி டர்ட்டி பிக்சர் படத்தின் மூலமாக பிரபலம் அடைந்தார். இப்படத்திற்கு, பிறகு நாயகியை மையமாகக் கொண்டு எடுக்கப்படும் திரைப்படங்களில் அதிகப்படியாக கவனம் செலுத்து வருகிறார். தமிழில், அஜித்குமாரின் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்திருந்தார். சமூக வலைதளங்களில் பிரபலங்களின் திரைப்படக் காட்சிகளுக்கும் பாடல்களுக்கும் ரீல்ஸ் செய்து வெளியிடுவார்கள். அதிலும், பிரபலங்கள் ஏதாவது ரீல்ஸ் செய்து விட்டார்கள் என்றால், அதனை உடனே வைரலாக்கி விடுவார்கள். அப்படித்தான், தற்போது நடிகை வித்யாபயாளன் க்யூட்டாக நடித்த ரீல்ஸ் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது, தமிழ் சினிமாவில் காமெடி ஜாம்பவான்களாக கொண்டாடப்படும் செந்தில் கவுண்டமணியின் ஒரு காமெடி காட்சியை ரீல்ஸ் செய்துள்ளார். அவரின் அந்த வீடியோவிற்கு கீழ் தமிழ் சினிமா ரசிகர்கள் சூப்பர் என கமெண்ட்…
அரசு மருத்துவமனைகளுக்கு 1100 மருத்துவர்கள் நியமனம் செய்ததில் பணியிடத் தேர்வு கலந்தாய்வில் மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்காதது சமூக அநீதி என பாமகவின் அன்புமணி கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் நியமிக்கப்படுவதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள 1100 மருத்துவர்களுக்கான பணியிடத் தேர்வு கலந்தாய்வு இன்று தொடங்கவுள்ள நிலையில், மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படாமல், முதல் கட்ட கலந்தாய்வுக்கு பொதுப்பிரிவினர் 100 பேர் அழைக்கப்பட்டுள்ளனர். கடந்த காலங்களில் கடைபிடிக்கப்பட்டு வந்த நடைமுறைகளுக்கு முற்றிலும் மாறாக மாற்றுத் திறனாளி மருத்துவர்களுக்கு முதல் வாய்ப்பு மறுக்கப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. அரசு மருத்துவமனைகளுக்கு 1100 உதவி மருத்துவர்களை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிக்கை கடந்த ஆண்டு நவம்பர் 21-ஆம் நாள் வெளியிடப்பட்டது. அதன்படி விண்ணப்பித்தவர்களில் தகுதியானவர்களுக்கு ஜனவரி 25-ஆம் தேதி போட்டித் தேர்வு நடத்தப்பட்டு, தேர்ச்சி பெற்ற 1929 பேருக்கு கடந்த பிப்ரவரி 25, 26 ஆகிய தேதிகளில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டு, காலிப்பணியிடங்களுக்கு இணையான மருத்துவர்கள்…
நடிகை Rashmika Mandanna குறித்து பழைய ஆடியோ வைரலானதால், அதை நீக்க 24 மணி நேரம் அவகாசம் வழங்கி சட்ட நடவடிக்கை எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே விவசாயத் தோட்டத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு யானையை விவசாயிகள் தீப்பந்தங்களுடன் விரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
