தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையிலான விவாகரத்து வழக்கின் இரண்டாம் கட்ட விசாரணை இன்று செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே இருவரும் தனித்தனியாக வசித்து வருவதாகக் கூறப்படும் நிலையில், சங்கீதா தரப்பில் விவாகரத்து மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மனுவில், விஜய்க்கு வேறொரு நடிகையுடன் தொடர்பு இருப்பதாகக் குறிப்பிட்டு, அதுவே விவாகரத்து கோர முக்கியக் காரணம் என சங்கீதா தரப்பில் தெரிவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
மதுபானமா? ஜூஸா?.. வீடியோவில் இருந்த ‘அந்த’ கிளாஸ்.. முதலமைச்சர் மீது பாயும் விமர்சனங்கள்..!
இன்றைய விசாரணையில், விஜய் நேரில் ஆஜராவாரா அல்லது அவரது வழக்கறிஞர்கள் மட்டும் ஆஜராவார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மேலும், நீதிமன்றம் இருதரப்பிற்கும் இடையே சமரச பேச்சுவார்த்தைக்கு வழிவகுக்குமா அல்லது வழக்கு அடுத்த கட்டத்திற்குச் செல்லுமா என்பது இன்றைய விசாரணையில் தெரியவரும்.

