டோலிவுட் நட்சத்திர தம்பதியான ராம் சரண் மற்றும் உபாசனா, தங்களின் மூன்று குழந்தைகளின் கைகள் ஒன்றாக இணைந்துள்ள ஒரு அழகான புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.
கடந்த 2012-இல் திருமணமான இந்த தம்பதிக்கு, 2023 ஜூன் மாதம் ‘கிளின்காரா’ என்ற மூத்த மகள் பிறந்தார். இதனைத் தொடர்ந்து, கடந்த ஜனவரி 31-ஆம் தேதி (2026) இவர்களுக்கு சிவராம் (மகன்) மற்றும் அன்வீரா தேவி (மகள்) என்ற இரட்டை குழந்தைகள் (Twins) பிறந்தனர்.
ரகசிய விசாரணை?.. விஜய் – சங்கீதாவை சேர்த்து வைக்க பெரியவர்கள் தீவிர முயற்சி..!
தற்போது பகிர்ந்துள்ள புகைப்படத்துடன் ராம் சரண், “மூன்று குழந்தைகளுக்குப் பெற்றோராகும் பாக்கியம் பெற்றது எனக்கு மிகுந்த நன்றியுணர்வை அளிக்கிறது; ரசிகர்களின் அன்பிற்கு நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல் உபாசனாவும், “நாங்கள் கற்பனை செய்தபடியே மூன்று குழந்தைகளுக்குத் தாயாக இருப்பதில் ஆசீர்வதிக்கப்பட்டவளாக உணர்கிறேன்; எங்களது குழந்தைகள் பிறருக்குக் கொடுத்து உதவும் நல்ல குணத்துடன் வளர வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்” என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

