பாலிவுட் நடிகை நிகிதா ராவல் சினிமா விழா ஒன்றில் கலந்துகொண்டு சென்றுகொண்டிருந்தபோது, தீவிர ரசிகை எனக் கூறி அருகில் வந்த பெண் ஒருவர் செல்ஃபி எடுப்பது போல் நடித்து திடீரென நடிகையின் கன்னத்திலும், அதைத்தொடர்ந்து உதட்டிலும் முத்தமிட்டுள்ளார்.

தொடர்ந்து உதட்டைக் கடித்தபடியும் முத்தமிட்டபடியும் இருந்த ரசிகையை, நிகிதா ராவல் பலமுறை தடுத்து விலக்க முயன்றும் அந்தப் பெண் விலகவில்லை. அங்கிருந்தவர்கள் வந்து அந்த ரசிகையை விலக்கிய பிறகு, தன் உதட்டை கையால் மறைத்தபடியும் தர்மசங்கடத்துடனும் நிகிதா ராவல் அங்கிருந்து விரைவாக நகர்ந்து சென்றார்.
ஹன்சிகாவுக்கு என்னாச்சு?.. கவலையில் ரசிகர்கள்..!
ஆண் ரசிகர்கள் எல்லை மீறும் சம்பவங்களை அதிகம் பார்த்திருக்கும் நிலையில், பெண் ரசிகையே கேமராக்கள் முன்பு இப்படி நடந்துகொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரபலங்கள் என்றாலும் அவர்களின் தனிப்பட்ட எல்லையை (Personal Space) ரசிகர்கள் மதிக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

