தமிழக வெற்றிக் கழகத்தின் ஆதரவாளரான நடிகர் ராகவா லாரன்ஸ் அண்மையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, கட்சித் தலைமைகளுக்கு மக்கள் அவகாசம் கொடுக்க வேண்டும் என்பதை விளக்க, “புது இடத்திற்குப் போகும்போது அங்கிருக்கும் தெரு நாய்கள் கத்தும், அதற்குப் பிடித்த மாதிரி பிஸ்கட் அல்லது பிரியாணி போட வேண்டும்” என்று ஒரு உதாரணத்தைக் கூறிப் பேசினார்.
லாரன்ஸின் இந்த “நாய்” உதாரணம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு தவெக ஆதரவாளரும் சின்னத்திரை பிரபலமுமான தாடி பாலாஜி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பொதுமக்களை லாரன்ஸ் எப்படி ‘நாய்கள்’ என்று ஒப்பிடலாம் என பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார்.
பாரதிராஜாவின் பூத உடலை வைத்துக்கொண்டே மோதல்?.. தடுத்து நிறுத்திய பிரபலம்..!
லாரன்ஸின் இத்தகைய பொறுப்பற்ற பேச்சு, அவரை நம்பியிருக்கும் கட்சிக்கும் அதன் தலைமைக்கும் (விஜய்) தேவையற்ற பாதிப்பை ஏற்படுத்தும் என்று குறிப்பிட்டுள்ளார். பொதுவெளியில் பேசும்போது வார்த்தைகளை கவனமாகப் பயன்படுத்த வேண்டும் என்றும், லாரன்ஸ் தன் பேச்சுக்காக மக்களிடம் கண்டிப்பாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் தாடி பாலாஜி வலியுறுத்தியுள்ளார்.

