மறைந்த இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் இறுதி அஞ்சலியின் போது, இசையமைப்பாளர் கங்கை அமரன் அவரது குடும்பத்தினரிடம் ஆவேசமாகப் பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது. அங்கிருந்த நடிகை ராதிகா சரத்குமார் உடனடியாகத் தலையிட்டு நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தார்.
பாரதிராஜாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த கங்கை அமரன், அவரது மறைவால் மிகுந்த சோகமடைந்தார். அப்போது பாரதிராஜாவின் குடும்பத்தினரைப் பார்த்து, “கடைசி காலத்துல அவரை ஒழுங்கா கவனிச்சுக்காம, தனியா விட்டுட்டீங்களே…” என்று கோபத்துடனும் அழுகையுடனும் கத்தினார். இதனால் அஞ்சலி செலுத்தும் இடத்தில் திடீர் பதற்றம் தொற்றிக் கொண்டது.
ராகவா லாரன்ஸ் ‘இந்த’ துறைக்கு அமைச்சர்?.. கலாய்க்கும் நெட்டிசன்கள்..!
நிலைமை சுமுகமற்றதாக மாறுவதைக் கவனித்த நடிகை ராதிகா சரத்குமார், உடனடியாக கங்கை அமரன் அருகே சென்று அவரைத் தடுத்து நிறுத்தினார். “இங்க இதெல்லாம் பேச வேண்டாம், அமைதியா இருங்க” என்று கூறி, அவரை அங்கிருந்து கனிவோடு சமாதானப்படுத்தி அழைத்துச் சென்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கங்கை அமரன், “பாரதிராஜா எங்களைச் சோறு போட்டு வளர்த்தவர். அவர் சென்னைக்கு வரவில்லை என்றால் நானும், இளையராஜாவும் இந்த இடத்திற்கு வந்திருக்கவே முடியாது. அப்படிப்பட்டவரை இழந்துவிட்டோம்” என்று கண்ணீருடன் குறிப்பிட்டார்.
தேனி மாவட்டத்தில் அரசு மரியாதையுடன் பாரதிராஜாவின் இறுதிச்சடங்குகள் நடந்து முடிந்த நிலையில், இறுதி அஞ்சலி இடத்தில் நடந்த கங்கை அமரனின் இந்த எமோஷனல் கோபமும், அதை ராதிகா கையாண்ட விதமும் தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

