Author: Prime Reporter
நடிகர் விஜய் மற்றும் திரிஷா ஆஸ்திரேலியாவில் சொத்து வாங்கியதாக சுமத்தியுள்ள குற்றச்சாட்டும், அது தொடர்பான ஆதாரச் சவாலும் இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் கட்சியில் முக்கிய மற்றும் செல்வாக்கு மிக்க தலைவராக திகழ்ந்த விஜயதாரணி, கன்னியாகுமரி மாவட்டத்தின் விளவங்கோடு தொகுதியில் தொடர்ந்து மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். தமிழ்த்தாய் வாழ்த்தை இயற்றிய கவிமணி தேசிய விநாயகம் பிள்ளையின் பேத்தியாக இருப்பதும், காங்கிரஸ் பாரம்பரியத்தை கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவராக இருப்பதும் அவரது அரசியல் பயணத்திற்கு தனித்துவத்தை வழங்கியது. கட்சியில் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்த அவர், 2016ஆம் ஆண்டு காங்கிரஸ் மகளிர் அணியின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டதுடன், கர்நாடக மாநில பொறுப்பாளராகவும் பணியாற்றினார். அதே ஆண்டில் மீண்டும் விளவங்கோடு தொகுதியில் வெற்றி பெற்று எம்எல்ஏவாகத் தொடர்ந்தார். வழக்கறிஞராகவும் இருந்த விஜயதாரணி, மூன்றாவது முறையாக சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வான பிறகு அவரது அரசியல் செல்வாக்கு மேலும் உயர்ந்தது. சினிமா டயலாக் பேசுனா ஓட்டு விழுந்துருமா? வெட்டி வீரவசனம் வேண்டாம்.. விஜய்யை சீண்டும் சேரன்! இந்நிலையில், மாநில அரசியலைத் தாண்டி தேசிய அரசியலில் தன்னை நிலைநிறுத்த வேண்டும்…
கோவை மாவட்டத்தின் 10 சட்டமன்றத் தொகுதிகளில் நேற்று ஒரே நாளில் 27 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதுவரை மொத்தம் 42 மனுக்கள் பதிவாகியுள்ள நிலையில், சுயேச்சை வேட்பாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி அரசியலுக்குள் நுழைந்துள்ள விஜய், 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தலில் தீவிர பணியாற்றி வருகிறார். எப்போது விஜய் தனது உரையை ஆரம்பித்தாலும், திமுகவை சீண்டாமல் இருப்பது இல்லை. குறிப்பாக திமுக – தவெக இடையேதான் போட்டி என ஒவ்வொரு பேச்சிலும் கூறி வருகிறார். இது குறித்து இயக்குநர் சேரன் போட்ட பதிவு தான் இன்றைய ஹாட் டாபிக்காக உள்ளது. அவர் எக்ஸ் தளத்தில் விஜய்யை தாக்கி பேசியுள்ளார் அதில், “புதுசா கட்சி ஆரம்பிச்சு மக்கள்கிட்ட ஓட்டு கேட்க வந்தா மக்களுக்கு என்ன ப்ரச்னை இருக்கு அதை தனது கட்சி எப்படி தீர்க்கும், நாட்டில் என்ன என்ன மாற்றங்கள் கொண்டு வரலாம். அதற்கு தன்கிட்ட என்ன என்ன திட்டங்கள் இருக்குன்னு பேசனுமா இல்ல உங்களுக்கு ஸ்டாலின் வேணுமா இல்ல நான் வேணுமான்னு கேட்டா அந்த தகுதி போதுமா ஒரு நாட்டை ஆள..” “உங்க இருவருக்கும்…
தொண்டாமுத்தூர் அருகே விவசாயி வீட்டில் புகுந்த மலைப்பாம்பின் பிடியிலிருந்து கோழியை வனத்துறையினர் உயிருடன் மீட்ட சுவாரஸ்யமான சம்பவம் அப்பகுதி மக்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடித்துள்ள ‘லீடர்’ திரைப்படம் இன்று வெளியான நிலையில், சமூக வலைதளங்களில் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.
தமிழ்நாடு 2026 சட்டமன்றத் தேர்தலுக்காக, திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள் வழங்கப்பட்டது. தொகுதிப் பங்கீடு முடிந்து எந்தெந்த தொகுதிகளில் போட்டி என முடிவு செய்தும் வேட்பாளர்களை அறிவிக்காமல் இழுபறி நிலையே நீடித்தது. பாஜக தனது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டதும், அதற்கு வெறும் ஒரு மணி நேரத்திற்குள் காங்கிரஸும் தங்களின் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு அரசியல் சூழ்நிலையை பரபரப்பாக்கியுள்ளது. இந்த பட்டியலில் மொத்தம் 28 தொகுதிகள் இடம்பெற்றுள்ள நிலையில், மேலூர் தொகுதிக்கான வேட்பாளர் மட்டும் இன்னும் அறிவிக்கப்படாமல் வைக்கப்பட்டுள்ளது. அதே சமயம், தற்போதைய 11 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது. சிஎஸ்கே முதல் வெற்றியை ருசிக்குமா? பஞ்சாபை எதிர்கொள்ள பக்கா பிளான்..! மற்ற தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் விரிவாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, பொன்னேரியில் துரை சந்திரசேகர், வேளச்சேரியில் ஜே.ஹெச்.எம். அசான், ஸ்ரீபெரும்புதூரில் செல்வப்பெருந்தகை, சோழிங்கரில் ஏ.எம். முனிரத்னம், ஊத்தங்கரையில் குப்புசாமி, கிருஷ்ணகிரியில் செல்லகுமார், பென்னாகரத்தில் ஜிகேஎம்…
“என் ஓட்டு விஜய்க்குத்தான்” எனப் பள்ளி மாணவர் ஒருவர் பேசிய வீடியோ வைரலான நிலையில், அந்த மாணவரின் அறியாமையைச் சுட்டிக்காட்டி இணையவாசிகள் கிண்டல் செய்து வருகின்றனர்.
ஐபிஎல் 2026 தொடர் மார்ச் 28ஆம் தேதி தொடங்கியது. இதில் முதல் போட்டியில் ராஜஸ்தானை எதிர்கொண்ட சென்னை அணி படுதோல்வியை சந்தித்தது. இந்த நிலையில் இன்று பஞ்சாப் அணியை எதிர்கொள்ள தயாராகி வருகிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் போட்டி நடைபெற உள்ளது. ஐபிஎல் புள்ளி பட்டியலில் ராஜஸ்தான் முதலிடத்தில், அடுத்தடுத்த இடங்களில் பெங்களூரு, டெல்லி, மும்பை, பஞ்சாப், ஐதராபாத் அணிகள் உள்ளன. கடந்த சீசனில் 10வது இடத்தை பிடித்தது போல, இந்த முறை முதல் போட்டியிலேயே சென்னை அணி 10வது இடத்தில் உள்ளது. அலட்சியம், துரோகம்… வாழ்த்து கூறி விளாசிய அண்ணாமலை..! நெட் ரன் ரேட்டிங்கில் வீழ்ச்சியில் உள்ள சென்னை அணி, இன்று பஞ்சாப் அணியை எதிர்கொள்ள உள்ளது. பஞ்சாப் அணி கடைசியாக குஜராத்துடன் போட்டி போட்டு வென்றது. இந்த முறை சென்னை அணியில் பிரெவிஸ், தோனி காயம் காரணமாக விலகியுள்ளதால், அணிக்கு பலவீனமானதாக பார்க்கப்படுகிறது. சென்னை அணியில் இருந்து இந்த…
வரும் தேர்தலில் பாஜக சார்பாக வெளியிடப்பட்டுள்ள வேட்பாளர் பட்டியலில் அண்ணாமலைக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. கோவை வடக்கு தொகுதியில் அண்ணாமலை போட்டியிடலாம் என தகவல் வெளியான நிலையில், இன்று வெளியான பட்டியலில், அவருடைய பெயர் இல்லாததால் ஆதரவாளர்கள் கட்சி தலைமை மீது அதிருப்தியில் உள்ளனர். இந்த நிலையில் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், பாஜக மற்றம் என்டிஏ வேட்பாளர்களுக்காக பிரச்சாரம் செய்வேன் என குறிப்பிட்டுள்ளார். அந்த பதிவில், 2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்காக அறிவிக்கப்பட்டுள்ள பாஜக சார்பாக வெற்றி பெறும் அனைத்து வேட்பாளர்களுக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்கள். முந்திரிக்கொட்டை மாதிரி முந்தியதால் வந்த வினை.. பாஜகவில் இருந்து அதிரடி நீக்கம்! ஊழல், அலட்சியம் மற்றும் DMK அரசின் துரோகத்தால் சோர்ந்துபோன தமிழ்நாட்டின் ஒவ்வொரு சகோதரர், சகோதரிகளின் ஆதரவும் அவர்களுக்கு கிடைக்கிறது. மாண்புமிகு பிரதமர் திரு மோடி அவர்களின் தொலைநோக்கு தலைமையில், இந்தியா வலிமை, விரிவாக்கம் மற்றும் தெளிவான நோக்கத்துடன் முன்னேறி வருகிறது.…
