Author: Prime Reporter
பொள்ளாச்சி அருகே யூடியூப் வீடியோக்களைப் பார்த்து கள்ளச்சாராயம் காய்ச்ச முயன்ற மூன்று நபர்களை மதுவிலக்கு பிரிவு போலீசார் அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
நடிகை கீர்த்தி சுரேஷுக்கு குடிப்பழக்கம் இருப்பதாக பரவிய தகவலை மறுத்த சமந்தா, அவருக்கு இருக்கும் ‘ஹைப்பர் மேக்ஸ்’ நகைச்சுவை உணர்வு குறித்து சுவாரசியமாக பேசியுள்ளார்.
தோல்வி பயத்தை மறைக்க அபத்தமான அவதூறுகளைத் தொடர்ந்து பரப்பும் முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்தல் காலத்தில் மட்டும் எட்டிப்பார்க்கும் தங்களைப்போல அல்லாமல் ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து தமிழகத்திற்கு அடிக்கடி வருவதோடு, ஒவ்வொரு முறையும் பல்லாயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களைத் தமிழகத்தின் வளர்ச்சிக்காக நல்கி வருபவர் நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள்! அதுமட்டுமல்லாது, தமிழின் பெருமையையும் தமிழ்நாட்டின் அருமையையும் நன்கு உணர்ந்து, உலகெங்கிலும் தமிழ் மண்ணின் புகழைப் பரப்பி வருபவர் நமது பிரதமர் அவர்கள். நான் எந்த கட்சியிலும் இல்லை.. என்னுடைய ஆதரவு இந்த கட்சிக்குத்தான்.. பிரபல நடிகை பதிவு! இந்நிலையில், அவர் தமிழ்நாட்டின் பெயரை மாற்றிவிடுவார் என எந்தவொரு அடிப்படையுமின்றி புரளியைக் கிளப்புவது தாங்கள் வகிக்கும் பொறுப்பிற்கு அழகல்ல!திரும்பத் திரும்ப ஒரு பொய்யைச் சொல்லி மக்களை நம்ப வைக்கும் கோப்பல்ஸ் தத்துவத்தைக்…
வரும் தேர்தலில் என்னுடைய ஆதரவு இந்த கட்சிக்குத்தான் என பதிவிட்டுள்ள நடிகைக்கு ஆதரவாகவும் மற்றும் எதிராகவும் நெட்டிசன்கள் கருத்துகள் பதிவிட்டு வருகின்றனர். நடிகை வினோதினி, குணச்சித்திர நடிகையாக பல படங்களில் நடித்து வருகிறார். முன்னதாக இவர் மநீம கட்சியில் பணியாற்றி பின்னர் அக்கட்சியில் இருந்து விலகினார். தற்போது இவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், தனது ஆதரவு திமுக கட்சிக்கு என குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளப்பதிவில், வரவிருக்கும் 2026 சட்டமன்றத்த் தேர்தலில்,ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக்கூட்டணிக்கு என் ஆதரவை வழங்க விழைகிறேன். நான் எந்த அரசியல் கட்சியையும் சேர்ந்தவளல்ல, எவ்வித பொறுப்போ பதவியோ வகிக்கவில்லை. எனது அரசியல் கருத்துக்களை முன்வைக்க எந்த நேரத்துலும் யாரிடமிருந்தும் பணமோ பொருளோ பெறவில்லை என்பதை இங்கு தெளிவாக பதிவு செய்கிறேன். கேப்டன் குறித்து சந்தர்ப்பவாத பேச்சு… பியூஷ் கோயலுக்கு எல்.கே சுதீஷ் கண்டனம்! 2002இல் சம்பாதிக்கத் தொடங்கிய நாள்…
மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த கேப்டன் அவர்கள் குறித்தும் தவறான கருத்தை கூறிய பியூஷ் கோயலுக்கு, சுதீஷ் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய அமைச்சர் திரு. பியூஷ் கோயல் அவர்கள், தமிழ்நாடு அரசியல் குறித்து விஜய்க்கு தெரியவில்லை என்று சில கருத்துகளை முன்வைத்தார். அதோடு நிறுத்தாமல் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தை உருவாக்கி, மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த கேப்டன் அவர்கள் குறித்தும் தவறான கருத்தை வெளிப்படுத்தி உள்ளார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. முதல் இடத்தை பிடித்த சிறகடிக்க ஆசை.. வெளியானது விஜய் டிவி சீரியல்களின் TRP தரவரிசை! கேப்டன் அவர்கள் தூய்மையான அரசியலில் ஈடுபட்டு தமிழ்நாட்டு மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே தனது வெற்றிக் கணக்கை தொடங்கி சட்டமன்றத்தில் கால் பதித்த அவர், சட்டமன்ற எதிர்க்கட்சித்…
சீரியல்கள் இல்லத்தரசிகளின் பொழுதுபோக்கு அம்சமாக உள்ளது. இதனால் சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் என அனைத்து டிவிகளில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கும் இல்லத்தரசிகள் மத்தியில் தனியிடம் உண்டு. இதில் பெரும்பாலும் சன் டிவி சீரியல்களே டிஆர்பி ரேட்ங்கில் முதல் 5 இடத்தையும் பிடித்துவிடும். மனம் கவர்ந்த சீரியல்கள், அடுத்தடுத்து திருப்பங்கள் என உன்னிப்பாக மக்கள் கவனத்தை பெறக்கூடும் சீரியல்கள் மிகக்குறைவு. அப்படித்தான் விஜய் டிவியில் சமீப காலமாக ஒளிபரப்பாகும் சீரியல்கள், அடுத்தது என்ன என்று பார்க்கும் அளவுக்கு திருப்பம் உடையதாக உள்ளன. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும், சிறகடிக்க ஆசை, அய்யனார் துணை, பாண்டியன் ஸ்டோர்ஸ், சின்ன மருமகள், மகாநதி போன்ற சீரியல்கள் வரிசையில் அண்மையில் ஒளிபரப்பான அழகே அழகு சீரியல் டாப் இடத்தை பிடித்துள்ளது. ஏண்டா டேய்… விஜய்யை திட்டிய வாகன ஓட்டியை விரட்டி சென்று மிரட்டிய பெண்..! இல்லத்தரசிகளின் அபிமான சீரியல்கள் முதல் 5 இடத்தை பிடித்துள்ளது. இந்த…
நடிகரும்இ தவெக தலைவருமான விஜய், தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். தேர்தலுக்கு ஒரு சில நாட்களே உள்ள நிலையில், மாவட்டம் முழுவதும் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் வரும் தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடும் விஜய், திருச்சி கிழக்கு தொகுதியில் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்துவிட்டு பிரச்சாரம் மேற்கொள்ள புறப்பட்டார். சென்னையில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் செல்ல விமான நிலையம் புறப்பட்டார். அப்போது கிண்டி சாலையில் விஜய் சென்ற காரை நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்த நபர் விமர்சித்துள்ளார். தமிழ்நாட்டை ‘கருணாநிதி தேசம்’ என பெயர் மாற்றிவிடுவார்கள்.. வானதி சீனிவாசன் தடாலடி! உடனே அருகில் மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த பெண், வாகன ஓட்டியை நோக்கி, தேவயில்லாம பேசாதே.. அவ்வளவுதான் என கூறியுள்ளார். இதைக் கேட்ட அந்த வாகன ஓட்டி, அந்த பெண்ணை ஏதோ செய்கையில் திட்ட, கடுப்பான அந்த பெண்,…
மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டின் பெயரை ‘கருணாநிதி தேசம்’ என்று மாற்றவும் தயங்க மாட்டார்கள் என வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரதமர் நரேந்திர மோடி 50 ஆண்டுகளாக தமிழ்நாட்டிற்கு வந்து கொண்டிருக்கிறார். திருச்சியில் நேற்று (1.4.2026) நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டில் ஒருவாரம் தங்கியிருந்து, தமிழ்நாடு எப்படி தலைசிறந்த மாநிலமாக இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வந்தால், உத்தரபிரதேசம், மணிப்பூர் போன்று வன்முறைக் காடாக ஆகிவிடும். இவர்கள் வந்தால் தமிழ்நாட்டின் பெயரையே, ‘தட்சிண பிரதேஷ்” என்று மாற்றவும் தயங்க மாட்டார்கள்” என கூறியிருக்கிறார். திருச்சியில் கட்சிக்காக காலங்காலமாக உழைத்த திமுக நிர்வாகிகளை அவமானப்படுத்தும் வகையில், மத அடிப்படைவாத அமைப்பின் தலைவர் இனிகோ இருதயராஜை திருச்சி கிழக்கு தொகுதியில் நிறுத்தியிருக்கிறார் ஸ்டாலின். அவரை ஆதரித்து பேசும்…
திருச்சியில் வேட்புமனு தாக்கலின் போது நடந்த ரோடு ஷோவில், தவெக தலைவர் விஜய்யின் வீடியோ வைரலாகி வருகிறது.
வரும் ஏப்.,23ஆம் தேதி தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக தமிழக அரசியல் கட்சிகள் பம்பரம் போல் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக திமுக, அதிமுக கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பரப்புரை செய்து வருகின்றனர். இதனிடையே பாஜக, காங்கிரஸ் கட்சி மட்டும் இன்னும் வேட்பாளர்களை அறிவிக்கவில்லை, இதனிடையே தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, கோவையில் சிங்காநல்லூர் மற்றும் கவுண்டம்பாளையம் தொகுதிகளுக்கு குறி வைத்திருந்தார். ஆனால் அதிமுக தரப்பில் கோவை வடக்கு மட்டுமே கொடுக்கப்பட்டது. இதனால் விரக்தியில் இருந்த அண்ணாமலையை, மேலிடம் சமரசம் செய்து, இந்த முறை கோவை வடக்கு அல்லது மொடக்குறிச்சியில் நிற்க வைக்க கோரிக்கை வைத்துள்ளது. கரூர் கூட்டத்தில் ஜனநாயகன் ஷூட்டிங்? திருச்சியில் விஜய் Open Talk..! ஆனால் அண்ணாமலை, கோவை மக்களவை தொகுதிக்குட்பட்ட ஏதேனும் ஒரு தொகுதியை ஒதுக்க வேண்டும் என வேண்டுகோள் வைத்துள்ளார். இதனிடையே கவுண்டம்பாளையம் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பிஆர்ஜி…
