முதலமைச்சரும் நடிகருமான விஜய் மற்றும் அவரது கல்லூரி கால நண்பரான நடிகர் சஞ்சீவ் குறித்த பழைய சுவாரசியமான நேர்காணல் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் மீண்டும் வைரலாகி, பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
சஞ்சீவ் அண்மையில் அளித்த பேட்டியில் குறிப்பிட்ட ஒரு சண்டைச் சம்பவத்தை மிகைப்படுத்திக் கூறிவிட்டார் என நெட்டிசன்கள் அவரைத் தற்பொழுது கிண்டல் செய்து (Troll) வருகின்றனர். சஞ்சீவ், விஜய் உள்ளிட்ட நண்பர்கள் குழுவினர் கல்லூரி படித்துக்கொண்டிருந்த போது வட இந்தியாவிற்குச் சுற்றுலா சென்றுள்ளனர். அப்போது ரயிலில் வந்த ஒரு கும்பல் (சுமார் 60 முதல் 70 பேர் உருட்டுக் கட்டைகளுடன்) இவர்களுடன் வந்த மாணவிகள் உட்பட அனைவரையும் தாக்கத் தொடங்கியுள்ளனர் .
கட்சியின் பிம்பத்தை உயர்த்துமா ‘ஜனநாயகன்’?.. ஜூலை 23-க்காகக் காத்திருக்கும் ரசிகர்கள்..!
அந்த சமயத்தில் ரயிலின் மேல் பெர்த்தில் (Upper Berth) படுத்திருந்த விஜய், கீழே நடப்பதைப் பார்த்துவிட்டு இரண்டு பெர்த்துகளையும் கைகளால் பிடித்துக்கொண்டு காற்றில் பாய்ந்து ஒரு உதை விட்டுள்ளார். உதை வாங்கிய நபர் தூக்கி வீசப்பட, அந்த இடைவெளியைப் பயன்படுத்தி அவர்கள் தப்பித்து ஓடியதாக சஞ்சீவ் விவரித்துள்ளார். இந்தக் குறிப்பிட்ட ரயில் சண்டைச் சம்பவம் குறித்து விஜய் ஏற்கனவே தனது பழைய பேட்டி ஒன்றில் வேறு விதமாகக் கூறியுள்ளார்.
விஜய் தனது பேட்டியில் இந்த சம்பவத்தை யதார்த்தமாகவும், தாங்கள் பயந்து ஓடியது போலவும் குறிப்பிட்டிருந்த நிலையில், சஞ்சீவ் அதனை ஒரு சினிமா பட பாணியில் மாஸ் ஹீரோ சண்டைக் காட்சி போல மிகைப்படுத்திக் கூறியுள்ளதாக நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் மீம்ஸ்களைப் பகிர்ந்து கலாய்த்து வருகின்றனர். விஜய்யின் பாடி லாங்குவேஜை சஞ்சீவ் அப்படியே பின்பற்றுவதாகவும், இதனால் அவரை நெட்டிசன்கள் “குட்டி பகவதி” என்றும் கிண்டல் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

