பரந்தூர் புதிய விமான நிலையத் திட்டம் குறித்து தி.மு.க. எம்பி எழுப்பிய கேள்விக்கு மத்திய அரசு எழுத்துப்பூர்வமாக முக்கிய விளக்கம் அளித்துள்ளது.
பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை நிறுத்த வேண்டும் என்றோ அல்லது கைவிட வேண்டும் என்றோ தமிழ்நாடு அரசிடமிருந்து தங்களுக்கு எந்தவிதமான அதிகாரப்பூர்வ கோரிக்கையும் வரவில்லை என மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
டெல்லிக்காக போராடும் தமிழ்நாடு.. ‘காக்ரோச்’ கட்சிக்கு ஆதரவாகத் திரண்ட இளைஞர்கள்..!
தி.மு.க. எம்பி வில்சன் எழுப்பிய கேள்விக்கு மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் அளித்த பதிலில், சென்னைக்கான இரண்டாவது பசுமை வெளி விமான நிலையமான பரந்தூர் திட்டத்திற்கான தேவையைக் கருத்தில்கொண்டு, அதுதொடர்பான நடவடிக்கைகள் தொடர்ந்து நடைமுறையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

